tamilnadu

img

28 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை

சென்னை,செப்.16- தமிழ்நாட்டில்  1 முதல் 12 ஆம்  வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும்  தனியார் பள்ளி மாணவர்கள், அரசு  பாலி டெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயண செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இவர்கள் பள்ளி, கல்லூரி களுக்கு சென்று வர அரசு இதற்கான கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு வழங்குகிறது. கடந்த 2 வருடமாக கொரோனா பாதிப்பால் இலவசப் பேருந்து பயண  அட்டை முறையாக வழங்கப்பட வில்லை. பழைய பயண அட்டை களையே பயன்படுத்த அறிவுறுத்தப் பட்டது. இந்த வருடம் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் வழக்க மான முறையில் நடைபெறுகிறது. ஜூன் மாதம் பள்ளி தொடங்கியது. மாணவர்கள் பயணம் செய்வதில் எவ்வித சிரமம் ஏற்படக்கூடாது என்ற  அடிப்படையில் கடந்த ஆண்டு பயன் படுத்திய அட்டையை நடத்துநர்க ளிடம் காண்பித்து பயணிக்க அறிவுறுத் தப்பட்டது. அதன் அடிப்படையில் 4 மாதமாக அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் மாண வர்களுக்கு பேருந்து பயண அட்டை தயாரித்து வழங்கும் பணி சாலைப் போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.)  மூலம் நடந்து வருகிறது. இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு தமிழகம் முழுவதும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் மூலம் மாணவர்களின் பெயர், விவரங்களை 7 போக்குவரத்து கழகங்கள் சேகரித்துள்ளன. அதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கான பேருந்து பயண அட்டை தயாரிக்கப் படுகிறது. இதற்காக பள்ளிகளுக்கே சென்று மாணவர்களை புகைப்படம் எடுத்து வழங்குவதற்கு அந்நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. பள்ளிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.களில் படிக்கும் 28 லட்சம் மாணவர்களுக்கு புதிய  பேருந்து பயண அட்டை விரைவில் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

;