tamilnadu

img

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.3,252 கோடியை விடுவிக்க அமைச்சர் வலியுறுத்தல்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் திற்கு 3,252 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசிடம் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித்திட்டம், தமிழகத்தில் 37 மாவட்டங் களில் 388 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள  12,525 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப் படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 85 லட்சத்து 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வேலை அட்டை  வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 1  கோடியே 9 லட்சம் பேருக்கு வேலை வழங்க  வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டில் 20 கோடி நாட்கள்  வேலை வழங்க ஒன்றிய அரசால் அனுமதிக் கப்பட்டது. இதுவரை 28 கோடியே 45 லட்சம்  நாட்கள் வேலை வழங்கப்பட்டு உள்ளது. இது 142 சதவீத சாதனையாகும். மொத்த பணி யாளர்களில் பெண்கள் 86 சதவீதமும், ஆதி திராவிடர் வகுப்பினர் 27 சதவீதமும், பழங்குடி யினர் 1.63 சதவீதமும் உள்ளனர்.

மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கண்ட வகுப்பினரின் பங்களிப்பு அதிகமாக இருக் கிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு இந்த திட்டம் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. ஆனால் ஒன்றிய அரசு திட்டத்துக்கு நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்கிறது. இதனால் திட்ட பணியாளர்களுக்கு குறித்த  காலத்தில் ஊதியம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. தற்போதைய நிலை யில் திட்ட பணியாளர்களுக்கான ஊதிய நிலுவை ரூ.2,400 கோடியாகவும், திட்டத் தில் கட்டப்படும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிலுவை ரூ.852 கோடி யாகவும் உள்ளது. எனவே நிலுவையில் உள்ள ரூ.3,252 கோடி திட்ட நிதியை விடுவிக்கக் கோரி தமிழக  முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர், ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நிலுவையில் உள்ள நிதியை விரைவில் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி நிதியை  விடுவிக்க வேண்டும். அந்த நிதி பெறப்பட்ட தும் பணியாளர்களின் நிலுவை ஊதியம், அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடி யாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.