tamilnadu

img

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமனுக்கு பிரியாவிடை

  1. தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உடலுக்கு ஜி.ராமகிருஷ்ணன், அமைச்சர் தங்கம் தென்னரசு, நாகைமாலி எம்எல்ஏ., உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி.
  2. பி.ஆர்.நடராஜன் எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி., சி.பத்மநாபன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி.
  3. எம்.சின்னத்துரை எம்எல்ஏ., கே.பாலபாரதி, கே.கனகராஜ் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி.
  4. மாதர் சங்க தலைவர்கள், வாலிபர் சங்க தலைவர்கள் இறுதி அஞ்சலி.
  5. மூத்த தோழர் எஸ்.ஏ.பெருமாள் கண்ணீர் அஞ்சலி.

மதுரை\ அருப்புக்கோட்டை மே 2 - ம.ரெட்டியபட்டி கிராமத்திற்குள் அந்த ஆம்புலன்ஸ் வாகனம் நுழைந்த போது அதிகாலை 4 மணி. ஊரே விடிய, விடிய காத்திருந்தது. வாகனம் நுழையும் போதே மொத்தக் கூட்டமும் பெரும் குரல் எடுத்து கதறியது. எப்போதும் சிரித்த முகமாய் எல்லோரையும் ஈர்க்கும்  தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், சிரிப்பை தொலைத்து, அந்த பேழையில் துயில் கொண்டிருந்தார். “வெங்கிடு மாமா எழுந்து வா“, “வெங்கிடு அண்ணா விழித்துப்பார்“ என  உறவினர்கள் கதறினார்கள். குமுறி னார்கள். “தோழர், எங்களை விட்டுப் போக எப்படி மனசு வந்தது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியனும், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனனும்  உற்ற தோழர்களாக இருந்த எம்.தாமஸ் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பி னர்களும் திருச்சுழி பகுதி தோழர்களும் கண்ணீர் தீரும் வரை அழுது தீர்த்தனர். “இப்படி உயிரற்று திரும்பவா உன்னை அனுப்பி வைத்தேன்“ என்று வீதியே அதிரும் வண்ணம் தனது கணவரின் உடலைப் பார்த்து கதறி னார் அவரது மனைவி பத்மினி.

மே.2, ம.ரெட்டியபட்டியின் பொழுது இருள் கவிந்தவாறே புலர்ந்தது. தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன்... மார்க்சிய இயக்கத்தின் அப்பழுக்கற்ற, அர்ப்பணிப்புமிக்க, பொழுதெல்லாம் மக்கள் பணிக்காக பயணித்துக் கொண்டே இருந்த மகத்தான தலைவர் மே 1 இரவு 10.45 மணியளவில் தனது உயிர் மூச்சை நிறுத்தியிருந்தார். அன்றைய தினம், இந்தியாவின் முதல் மே தினத்தின் நூற்றாண்டு. தமிழகமெங்கும் உற்சாக மாக கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. மாவட்டந்தோறும் சிஐடியு /ஏஐடியுசி சார்பில் மே தினப் பேரணிகளும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன. மதுரை தீக்கதிர் அலுவலக வளா கத்தில் காலையில் செங்கொடியை ஏற்றி  வைத்து, அங்குள்ள ஊழியர்களுடன் அளவளாவி, மகிழ்ச்சியை வெளிப் படுத்திவிட்டு, மாலையில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி விட்டு மீண்டும் மதுரை தீக்கதிர் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன்.

இரவு 10.45 மணியளவில் மதுரை  ஆரப்பாளையம் அருகே உள்ள குரு தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். சில அடி தூரம் மெல்ல நடந்து சென்ற அவர், கண்ணிமைக்கும் போராட்டங்களிலும் உரிய வியூகங்கள் வகுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செயலாற்றியவர். இளைய தலைமுறையினரோடும், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர் களோடும் நெருக்கமான உறவைப் பேணி வந்தார்.  இசையிலும், இலக்கியத்திலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. கட்சி வகுப்புகளிலும், பேரவைக் கூட்டங்களிலும், கட்சி  முடிவுகளையும் தத்துவப் பின்னணி யோடு மிகச்சிறப்பாக விளக்குகின்ற ஆற்றல் கொண்டவர். அனைவரிடமும் மிக எளிமையாக பழகக் கூடியவர். பொதுவாக, தன்னை முன்னிறுத்தாமல், கட்சியை முன்னிறுத்துபவர். 

2001 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலச்  செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, தமது இறுதி மூச்சு வரை கட்சி ஸ்தாபன அரசியல் பணியை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர். தென்தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி ஸ்தாபன பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். தேர்தல் காலங்களில் மிக நுட்பமாக திட்டமிட்டு தேர்தல் பணியாற்றியவர். தீக்கதிர் நாளிதழின் வளர்ச்சிக்கு தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஆற்றிய பங்கு மகத்தானது. ஆறு ஆண்டுகாலம் தீக்கதிர் ஆசிரியர் குழு பொறுப்பாளராகவும், தற்போது தீக்கதிர் வெளியீட்டாளராகவும், முதன்மைப் பொது மேலாளராகவும் செயலாற்றி வந்தார். கொரோனா காலத்திற்கு பிந்தைய கடினமான சூழலை தீக்கதிர் நாளிதழ் எதிர் கொண்ட நிலையில், அதை நிலை நிறுத்துவதற்கு திட்டங்கள் வகுத்து செயல்படுத்த துவங்கியிருந்தார். இந்நிலையில் அவரது அகால மரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தீக்கதிர் நாளிதழுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மறைந்த தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அவர்களுக்கு பத்மினி  (60) என்ற மனைவியும் சூர்யா (33) என்ற மகனும் உள்ளனர். அவரது மறை வால் துயருற்றுள்ள அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத்தார், கட்சி தோழர்கள், தீக்கதிர் ஊழியர்கள் அனை வருக்கும் கட்சியின் மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள்  மூன்று நாட்களுக்கு ரத்து செய்திடவும் கட்சி அணிகளை மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.