tamilnadu

img

குமரி மேல்புறத்தில் 300 உண்டியல்களில் சிபிஎம் மாநாட்டுக்கு குடும்ப சேமிப்பு நிதி

குமரி மேல்புறத்தில் 300 உண்டியல்களில் சிபிஎம் மாநாட்டுக்கு குடும்ப சேமிப்பு நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு  மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற  உள்ளது. இந்த மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும்  கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவ ரது வீடுகளில் உண்டியல் மூலம் நிதி சேமித்து, தலைவர்களிடம் வழங்கி வருகிறார் கள். கேரள எல்லையையொட்டிய மேல்புறம்  வட்டாரத்தில் 300 கட்சி குடும்பங்களுக்கும் களியல் வட்டாரத்தில் 160 குடும்பங்களுக் கும் ஒரு மாதத்திற்கு முன்பே சேமிப்பு உண்டி யல்கள் (காயின் பாக்ஸ்) வழங்கப்பட்டிருந் தன. இந்நிலையில், கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆர். செல்லசுவாமி, மேல்புறத்தில் சனிக் கிழமையன்று அகில இந்திய மாநாடு தொடர்பாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலை யில், அவரிடம் உண்டியல்களில் சேமித்த பணத்தை கட்சி உறுப்பினர்கள் வழங்கினர். முள்ளிக்காடு கிளை சார்பில் நேசமணி, ஹெலன், மேரி, கிருஷ்ணன், தேவதாஸ், செல்லசுவாமி உள்ளிட்டோர் தங்களின் உண்டியல்களை ஒப்படைத்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயராஜ் குடும் பத்தில் சேமித்த நிதி ரூ. 1040-ஐ அவரது மகள்  ஜெர்பினா (7) ஒப்படைத்தார். நிகழ்ச்சி களில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். லீமா றோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஹமது உசைன், ரெஜீஸ் குமார், நீலாம் பரன் உள்பட பலர் பங்கேற்றனர்.