சென்னை,ஏப்.28- சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்க ளின் சேவை ஜூன் வரை நீட்டிக் கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளதால், சென்னை யில் இருந்து பல்வேறு நகரங்க ளுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பய ணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு மற்றும் வழக்கமான ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு, வாராந்திர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது. இதில் சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்க ளின் சேவை ஜூன் வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) மே 2 ஆம் தேதி முதல் ஜூன் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். நாகர்கோ வில் – சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமைகளில் இயக்கப் படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 27 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். சென்னை எழும்பூர் – நாகர் கோவிலுக்கு வெள்ளி,சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06057) மே 3 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் நாகர்கோவில் – எழும்பூருக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழ மைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06058) மே 3 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப் படும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி யுள்ளது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.