“என்ன துரைசிங்கத் தோழர்… பெருங் குடியில என்ன பிரச்சன…? நேத்து பெருங்குடி போயிருக்கிறதாச் சொன்னாக…” “காலேஜூக்குப் படிக்கப் போன பயல்க.. சாதி சங்கக் கிளைய பெருங்குடியில அமைக்க ணும்னு பிடிவாதம் பிடிக்கிறான்க.. ஊர்ல படிக்காத ஜனங்க. சாதிச் சங்கமெல்லாம் இங்க தலகாட்டக் கூடாது.. ஒருத்தருக்கு ஒருத்தர் அன்னியோன்யமாப் பழகிக்கிட்டு இருக் கோம்… அதக் கெடுத்துப் பிடாதிங்க.. சாதிச் சங்கம் ஆரம்பிச்சா நமக்குள்ள பிளவுகள் வரும்னு நெனைக்கிறாங்க… இந்தப் படிச்ச, படிக்கிற பையன்களுக்கு மட்டும் அது ஏனோ தோண மாட்டேங்கிது…” “அந்தக் காலங்கள்ல கல்லூரிக்குப் போன பசங்க காங்கிரசு கட்சி… கம்யூனிஸ்ட் கட்சி… திராவிட இயக்கம்னு எதாவது ஒரு அமைப் பிற்கு ஆதரவா இருப்பாங்க… இன்னக்கி என்னடான்னா சாதி அபிமானிகளாகி சுதந்தி ரத்துக்குப் பாடுபட்ட.. போராடிய தலைவர்கள கூசாம சாதி முத்திர குத்திடுராங்க.. இப்ப பெருங்குடியில என்ன பண்ணிட்டு வந்திருக் கீங்க தோழர்…
” “அந்த எளவட்டப் பயல்கள… அவுங்க அப்பா, அம்மா எல்லாரையும் ஒண்னா ஒக்கார வச்சுப் பேசி அந்தப் பசங்க மனசுல முளைச்ச சாதிங்கிற வெசச்செடிய பிடிங்கி எறிஞ்சிட்டு வந்திருக்கோம்…” பெருங்குடி பலதரப்பட்ட ஜனங்கள் வாழு கிற கிராமம் ஆகும். ஏறத்தாழ நூறு வீடுகளை உள்ளடக்கிய ஊர். தோழர் துரைசிங்கம் வசிக் கிற மூதூர் கிராமத்திற்கு அடுத்த கிராமந்தான் பெருங்குடி. மூதூர் சற்று பெரிய கிராமம். ஆம் பெரிய கிராமம் என்றுதான் கூற முடியும். ‘கிராமம்’ என்றும் சொல்ல முடியாத நகரம் என்றும் அழைக்க முடியாத பேருர் அது. மூதூர் கிராமத்தில் தனது இருபத்தி ஐந்தா வது வயதில் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளையை அமைத்தவர்களில் தோழர் துரைசிங்கமும் ஒருவர். இன்று அவருக்கு அனேகமாக அறுபது வயதாகலாம். இந்த முப்பத்தி ஐந்து வரு டத்தில் வாலிபர் சங்கம், விவசாயிகள் சங்கம், மகளிர் சங்கம்,
இலக்கிய மன்றம் முதலிய வெகு ஜன அமைப்புக்களை ஆரம்பித்து, கட்சி உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக ஏறத் தாழ நூறு பேர்களை உருவாக்கி இருக்கிறார் தோழர் துரைசிங்கம். தீக்கதிர், செம்மலர், இளைஞர் முழக்கம், மகளிர் சிந்னை முதலிய இதழ்களை வர வழைத்து… அனைவரையும் வாசிக்க வைத்து ஆதரவாளர்களின் அறிவாற்றலை அதிகப் படுத்தியவர் தோழர் துரைசிங்கம் எனலாம். வாழ்க்கைத் தேரை நகர்த்த சின்ன பல சரக்குக் கடை வைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் தோழரை இந்தக் கடையில் பார்க்க முடியாது. எதாவது பொதுப் பிரச்ச னைக்காக தினந்தோறும் டவுனுக்குப் போய் விடுவது துரைசிங்கத்திற்கு வழக்கமாகி வரு டங்கள் பலவாகி விட்டன. அதனால் கடையை அவரது மனைவிதான் கவனித்துக் கொள்வார். காவல் நிலையம், தாசில்தார் ஆபீசு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இப்படி எதாவது ஒரு அரசு அலுவலகத்தில் தோழர் துரை சிங்கத்தைக் காணலாம். எப்போதும் நியாய மான விசயங்களுக்காக.. அதுவும் மற்றவர் களுக்காக… வருவதால் ஆளும் கட்சி பிர முகர்களை விட அங்கு இவருக்கு மிகுந்த மரி யாதை தருவார்கள். மூதூர் கிராமம் மட்டுமல்ல… பெருங்குடி கிராமத்தாரும் அரசாங்க அலுவலகங்களில் காரியங்கள் ‘பெண்டிங்’ என்றால் இவரைத் தான் அணுகுவார்கள். இவரும் முகம் சுளிக்கா மல் அவர்களுக்காக அலுவலகங்கள் போய் வருவார். இந்த செயல் மூதூர் கிராமத் தோழர் கள் சிலருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. “அவன்களுக்காக எதுக்கு இவர் அழைஞ்சு நேரத்தை வீணாக்கணும்… நேத்துக் கூட சாதி சங்கக் கிளை வைக்கப் போறாங்கண்ணு ராத்திரி பத்து மணி வரைக்கும் அவன்களோட பேச்சு வார்த்த நடத்தி சரிப்படுத்தி இருக்கார். இவ்வளவு பண்ணியும் தேர்தல் வந்தால் நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடாமல் யார் யாருக்கோ ஓட்டுப் போடுறான்க… இவுங்களுக்காக எதுக்கு தேவை இல்லாம ஒழைக்கணும்…? இப்படி யொரு எண்ணம் அங்குள்ள இளையோர் மனது களை குடைந்து கொண்டே இருந்தது. மேலும், பெருங்குடி கிராமத்தினர் தோழர் துரைசிங்கத்தை தொந்தரவு செய்வது கண்டு ஆத்திரப்பட்ட இளம் தோழர் ஒருவர் “ அவுங் களுக்கு எதுக்கு தோழர் நாம ஒதவி செய்ய ணும்… ஒங்க ஒழப்ப உறிஞ்சிக்கிட்டு… ஓட்டுப் போடும் போது மட்டும் வேற கட்சிக்கிப் போடு றத ஒங்களால எப்பிடி தோழர் சுலபமா எடுத்துக் கிட முடியிது…” பேரவைக் கூட்டமொன்றில் தோழர் துரைசிங்கத்திடம் வினவ, அவர் சிறிது புன்னகைத்து விட்டு, பிறகு பேசத் தொடங்கி னார். தோழரே… வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லி… நடப்பு நிலையை நினைவூட்டி னால் உங்களுக்கு இது பற்றிய தெளிவு கிடைக்கும். 1949 ஆம் வருடம் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது பிரதமர் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கட்சிப் பணியாற்றினார்கள். கட்சி தடை நீக்கப்பட்ட பிறகு ஜனங்களின் பிரச்சனை களைத் தீர்க்க களத்தில் இறங்கிப் போராடி னார்கள். போராடியவர்களை ஈவிரக்கமின்றி போலீஸார் தாக்கினர். சிறைகளிலும் அடைத்து சித்ரவதை செய்தனர். இதைத்தான் வேடிக்கை யாக விவரிப்பார்கள். “விடுதலையால் காங்கிரசு கட்சிக்கு ஆட்சி கிடைத்தது…
முஸ்லீம் லீக்கிற்கு பாகிஸ்தான் கிடைத்தது… கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சிறைச்சாலை கிடைத்தது என்று… 1957 ஆம் ஆண்டு உலகிலேயே முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூ னிஸ்ட் அமைச்சரவை கேரளாவில் அமைந்தது. தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அந்த ஆட்சியை தொடரவிடா மல் 356 ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைத் தது காங்கிரசு அரசு. அப்போதும் பிரதமராக இருந்தவர் நேருதான்.. அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திராகாந்தி. இப்போது இன்றைய நிலைமையை கூர்ந்து நோக்குங்கள். ஆட்சியில் பாஜக வினர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாள ரான சர்தார் வல்லபாய் படேலை போற்றிப் புகழ்கிறார்கள். அவருக்கு குஜராத்தில் பிரம் மாண்டமான சிலை எழுப்பி இருக்கிறார்கள்.
பண்டித ஜவஹர்லால் நேருவை காழ்ப்புணர்வு டன் கண்டபடி விமர்சிக்கிறார்கள். இந்த நேரத்தில் நாம என்ன செய்கி றோம்…? காங்கிரசு கட்சித் தலைவர்களில் ஓரளவு முற்போக்கானவர் நேரு… அவரை கண்ணியக் குறைவாகப் பேசுவதை பா.ஜ.க தலைவர்கள் கைவிட வெண்டுமெனச் சொல்லி நேருவைத் தூக்கிப் பிடிக்கிறோம். “கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தவர்… கம்யூனிஸ்ட்களை சிறையில் அடைத்தவர்… கம்யூனிஸ்ட் அமைச்சரவையைக் கலைத்த வர்” என்று பார்க்காமல் கடமையைச் செய்கி றோம். இப்போது யோசித்துப் பாருங்கள்… ஓட்டுப் போடவில்லை என்பதால் நம்பை போன்ற உழைக்கும் வர்க்கத்தாருக்கு உதவாமல் இருப்பது சரியா..? தோழர் துரைசிங்கத்தின் பதில், கேள்விக் கணையைத் தொடுத்த இளம் தோழருக்கு, நூறு சதவிகிதம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கமாக இருந்தது.