சேலம், டிச.8- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது மாநாட்டில் பங்குபெறும் வெண்மணி தியாகி கள், சேலம் சிறை தியாகிகள், வீரத் தெலுங்கானா போராட்ட தியாகி களின் ஜோதி பயண குழுவிற்கு சேலம், தருமபுரியில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது மாநாடு கேரள மாநிலம், திருச்சூரில் டிச.13 முதல் டிச.16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்குபெற உள்ள வீரத்தெலுங்கானா தியாகி கள் ஜோதி, வெண்மணி தியாகிகள் ஜோதி, சேலம் சிறைத்தியாகிகள் ஜோதி பயணம் துவங்கியுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட் டத்தில் ஆத்தூர், பெத்தநாயக்கன் பாளையம், வாழப்பாடி பகுதிக ளுக்கு வந்த சேலம் சிறை தியாகிகள், வெண்மணி தியாகிகள் ஜோதி பய ணக்குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் அகில இந்திய இணைச்செயலாளர் விஜூ கிருஷ்ணன், துணைத்தலை வர் எஸ்.கே.பிரிஜா, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச்செய லாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட தலைவர் அன்பழகன், மாவட்ட துணைத்தலைவர்கள் பி.தங்க வேலு, ஏ.பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வி.தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தெலுங்கானாவிலிருந்து ஓம லூர் வந்தடைந்த வீரத்தெலுங் கானா நினைவு ஜோதிக்கு ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் அகில இந்திய நிதி செய லாளர் கிருஷ்ண பிரசாத், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மாநில துணைத்தலைவர் பி.டில்லி பாபு, சிபிஎம் ஓமலூர் தாலுகா செய லாளர் ஈஸ்வரன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சேலம் சிறைத் தியாகி ஆறுமுகம் பிறந்த தியாக பூமியாம், அரியாக் கவுண்டம்பட்டியில் வீரத்தெலுங் கானா நினைவு ஜோதி, மற்றும் வெண்மணி நினைவு ஜோதிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி
தெலுங்கானாவிலிருந்து புறப்பட்ட வீரத்தெலுங்கானா நினைவுஜோதி தருமபுரி மாவட்டத் திற்கு வியாழனன்று வந்தது. பயணக்குழுவிற்கு, மாவட்ட எல்லையான காரிமங்கலம் நெடுஞ் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் பேரணி யுடன், பட்டாசு வெடித்து உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இதில், சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பி னர்கள் சாகர், பிரகாசம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் டி.ரவீந்திரன், பி.டில்லிபாபு, மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்டத் தலை வர் குமார், செயலாளர் சோ.அருச்சு ணன், பொருளாளர் சி.வஞ்சி, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.