விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மின் கம்பங்கள்
பாபநாசம், மே 21- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை முக்கியமான சாலையாகும். இதில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாபநாசத்தில் சாலையின் வளைவில் உள்ள மின்கம்பம் வளைந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன், மின்சாரத் துறையினர் இந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நட வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோன்று பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் ரயில்வே கேட்டை தாண்டி, வயல் வெளியில் உள்ள மின் கம்பம் ஒன்று, வயலில் சாய்ந்த நிலையில் உள்ளது. எனவே விபத்து நேரும் முன் சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.