சிம்லா,பிப்.23- இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 23 புதனன்று ரிக்டர் 4.0 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஷிமாவில் இருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் பிப்ரவரி 23 அன்று காலை 9.58 மணியளவில் 7 கிலோமீட் டர் ஆழத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோ லில் 4.0 ஆக பதிவாகி உள்ள தாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லேசான அளவில் நில அதிர்வு ஏற்பட்ட காரணத்தால் குடியிருப்பு பகுதிகளில் அதிக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.