tamilnadu

img

மருத்துவர் கு.சிவராமனுக்கு நன்னெறிச் செம்மல் விருது

கோவை, அக்.19- கோவை நன்னெறிக் கழகம் சார்பில் பிரபல சித்த மருத்துவர் கு.சிவ ராமனுக்கு நன்னெறிச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  நமது பாரம்பரிய பண்பாட்டு உணவு வகைகளின் அதிசயத்தக்க சிறப்பு களை தொடர்ந்து வெளிப்படுத்தியும், இந்த உணவு முறை பழக்கத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுவது குறித்தும் தொடர்ந்து உரையாற்றி வருபவர் மருத்துவர் கு.சிவராமன். உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற நிலைப்பாட்டோடு மக்கள் மொழியில் எளிமையாக எடுத்துரைத்து தமிழ்ச் சமூகத்தை ஆரோக்கிய சமூகமாக மாற்ற தொடர்ந்து இயங்கி வருகிறார். இதன்தொடர்ச்சியாக மாநில திட்டக் குழு உறுப்பினராக மருத்துவர் கு.சிவ ராமனை அண்மையில் தமிழக அரசு நியமித்தது. பல்வேறு சிறப்புகளுடன் இயங்கி வரும் இவருக்கு கோவை நன்னெறிக்கழகம் நன்னெறிச்செம்மல் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இதற்கான விழா கோவை கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடைபெற்றது. எழுத்தாளரும், பிரபல தொழில் அதி பருமான இயகோகா என்.சுப்பிரமணி யம் விழாவிற்கு தலைமை வகித்தார். முதன்மை சிறப்பு விருந்தினர்களாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், எழுத்தாள ரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினரு மான சு.வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் பங்கேற்று மருத்துவர் கு.சிவராமன் குறி த்தும், தமிழ்ச்சமூகத்தின் ஆரோக்கிய மான எதிர்காலத்திற்கு தேவையான மருத்துவ ஞானம் குறித்தும் சிறப்புரை யாற்றினர். முன்னதாக மருத்துவர் கு.சிவராம னுக்கு நன்னெறிச் செம்மல் விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டது. இதில்,  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாள ரும், இலக்கிய பற்றாளருமான கிருஷ்ணன் மற்றும் நன்னெறி கழகத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் திரளானோர் பங்கேற்ற னர். நிறைவாக மருத்துவர் கு.சிவ ராமன் ஏற்புரையாற்றினார்.