tamilnadu

ஒன்றிய அரசின் பட்ஜெட் வணிகர்களுக்கு ஏமாற்றம் : விக்கிரமராஜா

சென்னை, பிப். 2- ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வணிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டு ஆண்டு கால கொரோனா தாக்கத்திலிருந்து வணிகர்களையும், வணிகத்தை யும் பாதுகாத்து எளிமையாக நிதி ஆதாரங்கள் கிடைத்திட வழிசெய்யும் நிதிநிலை அறிக்கையாக ஒன்றிய அரசின் 2022-23ஆம் ஆண் டிற்கான பட்ெஜட் இருக்கும்  என்று மிகுந்த எதிர்பார்ப்புக ளுக்கிடையில், ஜி.எஸ்.டி வரி ரிட்டன் தாக்கல்களில் ஒரு  சில தளர்வுகளையும், வருமான வரி தாக்கலில் கடந்த 2  ஆண்டுகளுக்கு திருத்தங்க ளுக்கு அனுமதி அளித்திருப் பதைத் தவிர, வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் ஓரளவே பயனுள்ள நிதிநிலை அறிக்கையே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளுக்கு அனு மதியும் அளித்து வரிவிதிப்பும் செய்திருப்பது வரவேற்கத்தக் கதாக இருந்தாலும், டிஜிட்டல் கரன்சி இந்திய சட்ட திட்டங்க ளுக்கு உட்பட்டு, வரை முறை படுத்தப்படு வதோடு டிஜிட்டல்  கரன்சி பரிமாற்ற மையங்கள்  அனுமதித்து எளிமைபடுத் தப்பட வேண்டும்.  தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யாதிருப்பதும் ஏற்கத்தக்கதல்ல. மொத்தத் தில் வணிகர்கள் எதிர்பார்த்த தைப் போல இல்லாதது பெரிய தொரு ஏமாற்றம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.