சென்னை,மார்ச் 5- தமிழ்நாடு காவல்துறைக்கு அதன் தலைவர் சைலேந்திரபாபு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது:- வன்முறையாளர்கள், கூலிப்படையி னர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கோர்ட்டில் விரைந்து முடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்து சிறையில் அடைக்க வேண்டும். கண்டுபிடிக்கப் படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் திருட்டு வழக்குகளில் குற்ற வாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். திருடப்பட்ட பொருட் கள் மீட்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்யும் ரவுடிகளை மாவட்ட வருவாய் அதிகாரிகள் முன் ஆஜர்படுத்தி, நல்லொழுக்க பத்திரம் பெற வேண்டும். மீறுபவர்கள் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் அன்றாடம் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தடுக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ள வேண்டும். வாகன விபத்து களை குறைக்க செயல்திட்டங்கள் வகுக்க ப்பட வேண்டும். குற்றவாளிகளின் புகைப் படங்கள், காணொலிகள் ஆவணப்படுத் தப்பட வேண்டும். இவர்களை பிற்காலங் களில் அடையாளம் காண இது உதவி யாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.