சென்னை, மே 16- இந்தாண்டில் 2 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடை பெற்ற தேசிய டெங்கு தடுப்பு தின நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு தடுப்புப் பணியில் பணியாற்றிய முன் களப்பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணி யன் கூறியதாவது:- கடந்த 2012, 2015, 2017 கால கட்டத்தில் டெங்கு வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அதிகபட்சமாக டெங்குவிற்கு 65 பேர் 2017ஆம் ஆண்டு மரணமடைந்தனர்.
எனவே, இந்த முறை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வீடு தோறும் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. ‘எலிசா’ முறை யில் டெங்குக் காய்ச்சலை கண்டு பிடிக்க பரிசோதனை மையங் கள் 125ஆக தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 21,000 பணியாளர் கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொசுக் களை ஒழிக்க தேவையான மருந்து கையிருப்பில் உள்ளது. தொடர்ந்து டெங்கு விழிப்பு ணர்வு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 2021இல் டெங்குக் காய்ச் சலுக்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு 1,73,199 பரிசோதனைகள் செய்யப் பட்டு 6,039 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிசெய்யப் பட்டது. 2022ஆம் ஆண்டு 2 லட்சம் பரிசோதனைகள் இலக்கு நிர்ணயித்து 5 மாதங்க ளில் 66,747 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 2,485 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளித்ததால் உயிரி ழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த 5 மாதங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை. கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னையில் கடந்த 5 மாதங்களில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், திருவி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் தாயகம் கவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.