நீதிக்கு கிடைத்த வெற்றி ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு
பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் தீர்ப்பு
சென்னை, மே 13 - பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக் கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பு, நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும், இந்தத் தீர்ப்பை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்ப தாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செய லாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை அடைத்து வைத்து, சித்ர வதை செய்து, மிரட்டல் மூலம் கும்பல் பாலியல் வன்முறை நடத்தி, ஆபாச வீடியோக்கள் எடுத்து வெளியிட்ட கொடூரச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கோவை மாவட்டத்திலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத் தது. குற்றவாளிகளை கைது செய்ய வலி யுறுத்தியும், மனிதநேயத்தில் அழிவை ஏற்படுத் தும் இந்த கொடூரத்திற்கு கண்டனம் தெரி வித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் பட்டன. அன்றைய அதிமுக அரசு மற்றும் காவல் துறை, குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடு பட்டன. ஆனால், அனைத்து அமைப்புகளை யும், அனைத்து கட்சிகளையும் இணைத்து மாதர் சங்கம் நடத்திய உறுதியான மக்கள் இயக்கத்தின் மூலம், தமிழக அரசை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி, குற்றவாளிகள் கைது செய்யப்பட காரணமானது. 6 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், 2025 மே 13 அன்று, கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அவர்களின் தீர்ப்பில், 1. சபரி ராஜன், 2. திருநாவுக்கரசு, 3. சதீஷ், 4. வசந்த குமார், 5. மணிவண்ணன், 6. பாபு, 7. ஹெரன் பாலு, 8. அருளானந்தம், 9. அருண்குமார் ஆகிய ஒன்பது பேரும் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டனர்: மேலும் ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகளி டம் அபராதத் தொகையை வசூலித்து பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுப்பது ஏற்புடையது அல்ல; எனவே அரசே பாதிக்கப்பட்ட பெண் களுக்கு தீருதவி வழங்கிட வேண்டும். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முனைப்புடன் போ ராடிய அரசு வழக்கறிஞர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. ஆறு ஆண்டுகள் எவ்வித சமரசத்திற்கும் இட மளிக்காமல், நேர்மையாக, துணிவுடன், நீதிக் காக, நின்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறோம். தமிழக அரசு, பாதிக்கப்பட்ட இளம்பெண் களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும். வழக்கில் உறுதியோடு நின்ற பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் தீருதவி வழங்கி அரசு வேலை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக, மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் போராட்டங்களில் ஈடு பட்டதற்காக, அவர்கள் மீது காவல்துறையி னர் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர். ஆளும் தரப்பில் இருந்து பல்வேறு மிரட்டல் களும் அச்சுறுத்தல்களும் விடப்பட்டன. இவை அனைத்தையும் துணிச்சலோடு எதிர்கொண்டு, நீதிக்கான நெடும் பயணத்தில் வெற்றி ஒன்றே இலக்கு என போராட்டக் களம் கண்டோம். நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு, தமிழகத் தில் அநீதிக்கு எதிராக அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் நடத்தும் போராட்டங்களின் வெற்றிக்கு முக்கிய சான்றாக அமைகிறது. இந்தப் போராட்டத்தில் உறுதியாக நம்மு டன் நின்ற அனைத்து அமைப்புகளுக்கும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. எதிர்காலத்திலும் நீதிக்கான போராட்டங்களை சமரசம் இன்றி முன்னெடுப்போம்!. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு பொள்ளாச்சி கும்பல் பாலியல் வன் கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மக ளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்பதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகளின் வாரிசு களும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது. இந் நிலையில் பொள்ளாச்சி கும்பல் பாலியல் வன் கொடுமை வழக்கில் அனைத்து குற்றவாளி களையும் கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரியும் தமிழ் நாடு முழுவதும் மாதர் சங்கங்களும், இந்திய மாணவர் சங்கமும் பல போராட்டங்களை முன்னெடுத்தது. இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் இதற்கான போராட் டத்தை முன்னெடுத்தது. இந்தப் போராட்டங் களில் மாணவர் சங்கத் தலைவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி அராஜகமாக கைது செய்தனர். காவல்துறையின் தடியடி யால் சில மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதன் விளைவாக இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டு விசாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இதுபோன்ற பாலியல் வன்கொடுமை களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், மாணவிகள் வெளியே வர முடியா மல் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரும் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகை யில் இருக்கிறது. இந்த தீர்ப்பை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்கிறது. மேலும் பொள்ளாச்சி சம்பவத்தில் குற்ற வாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும் கல்லூரிகளில் போராடிய மாணவர் சங்க தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.