tamilnadu

img

அர்ப்பணிப்புமிக்க அரசியல் வாழ்வு! - அம்மா ஜானகி!

அர்ப்பணிப்புமிக்க அரசியல் வாழ்வு! - அம்மா ஜானகி!

12 வயதில் நாடக அரங் கில் அடியெடுத்து வைத்தார். 24 வயதில் சிறைக்  கொட்டடியில் அடைக்கப் பட்டார். நாட்டுப்பற்று பாடல்கள் பாடி, காங்கிரஸ் கட்சி உறுப் பினரானார். பாட்டாலேயே பாட்டாளி மக்களின் தலைவர்கள் ஜீவா,  எம்ஆர்வி, பிஆருக்கு அறிமுகமாகி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தலை வருமானார். காங்கிரஸ் தலைவரான நேதா ஜிக்கு மதுரையில் சிறப்பான வரவேற் பளித்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர் களால் திருச்சி பொன்மலைக்கு நாடு  கடத்தப்பட்டார். யுத்த எதிர்ப்பு பிரச் சாரத்துக்காக தென்னிந்தியாவிலேயே முதல் பெண்மணியாக கைது செய்யப் பட்டார். வேலூர் சிறையின் பரிசாக ஆஸ்துமாவை பெற்று அந்திமக் காலம் வரை அவஸ்தைப்பட்டார். ஐந்து முறை  சிறை சென்றார். மக்கள் பணியில், விவசாயி களை, பெண் தொழிலாளி களை திரட்டுவதில் முன்னின் றார். பண்ணையார்களிட மிருந்து விவசாயிகளை பாது காக்க தானே வயலில் இறங்கி  ஏர்பிடிக்கவும் செய்தார். விவசா யிகள் சங்க தலைவரானார். தொழிலாளர்களின் தோழரானார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப் பினர், மாநிலக் குழு உறுப்பினரானார். 1964 இல் சிபிஎம் உருவாக தமிழ்நாட்டில் முன்னின்ற 52 பேரில் அம்மாவும் ஒருவர். மக்கள் பணியில் மதுரை நகர்மன்ற  உறுப்பினராக, ஜில்லா போர்டு உறுப்பி னராக, சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாவட்டத்தில் அம்மா கட்சி என்றழைக்கப்பட்டது. ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவ ராகவும் நீண்ட காலத் தலைவராகவும் செயல்பட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்திய அரசும், தமிழக அரசும் தர முன்வந்த ஓய்வூதி யம், தாமிரப் பட்டயத்தையும் கட்சியின்  முடிவுப்படி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். ஆனால், தனது வீடுகளை, நகைகளை, பட்டுச் சேலைகளை விற்று கட்சியை வளர்த்த அம்மா ஜானகி, கடைசியில் வாடகை வீட்டில்  குடியிருந்தார். அதுவும் கட்சி அலுவல கமான பின்பு அதில் ஓர் சிறிய அறை யிலேயே தன் வாழ்நாளைக் கழித்தார். கண்ணுக்கு இனியராய் காட்சிக்கு  எளியராய் அரசியலில் முன்னுதார ணமாய்த் திகழ்ந்தார். ஏழை-எளிய மக்களுக்காக உழைத்த அம்மா ஜானகி என்றென்றும் மக்கள் மனங்க ளில் நிறைந்திருப்பார். அர்ப்பணிப்பு மிக்க அரசியல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் நிலைத்திருப்பார்!      - ப.முருகன்