பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு தினமும் புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மிக முக்கியமான புகார், தென் சென்னை பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் கொடுத்த புகார் தான். கட்சியின் தலைமை தேர்தல் செலவுக்கு ஒவ்வொரு வட்ட நிர்வாகிக்கும் ஒரு லட்சம் ரூபாய், பூத் கமிட்டி தலைவருக்கு 50,000 ரூபாய், உறுப்பினர்களுக்கு 10,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதற்காக தென்சென்னை தொகுதி வேட்பாளரான எனக்கு 40 கோடி ரூபாய் கட்சித் தலைமையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதை நான் தென்சென்னை தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கரு.நாகராஜ னிடம் கொடுத்தேன். அவர், நான் தலைவராக இருந்த காலத்தில் என்னால் நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர் காளிதாசுடன் இணைந்து செலவு செய்தார்.
கரு.நாகராஜனிடம் கொடுக்கப்பட்ட பணத்தில் 4 கோடி ரூபாய்க்கு கணக்கே இல்லை. அவரும் காளிதாசும் தலா 2 கோடி ரூபாய் பிரித்து எடுத்துக் கொண்டார்கள். அதை உடனடியாக விசா ரித்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தமிழிசையின் புகார். இந்தப் புகாரை அவர் பாஜக தேசியத் தலை மைக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதுதான் பாஜக வட்டாரங்களில் தற்போதைய பேச்சு. பாஜக தேசியத் தலைமை ஒவ்வொரு விஐபி தொகுதிக்கும் 40 கோடி ரூபாய் வீதம் தென் சென்னை, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, நீலகிரி ஆகிய 5 தொகுதிகளுக்கு 200 கோடி ரூபாய் அனுப்பி வைத்தது. மாநிலக் கட்சி நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகள் என மதுரை, திருப்பூர், வட சென்னை போன்ற தொகுதிகளுக்கு தலா 10 கோடியும், தேறவே தேறாது என கணிக்கப்படும் சிதம்பரம் தொகு திக்கு 8 கோடி ரூபாயும், நிச்சயம் வெல்வோம் என பாஜக கணித்த தேனி, வேலூர், தருமபுரி போன்ற கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளுக்கு தலா 30 கோடி ரூபாயையும் அனுப்பியது என விவரமறிந்த அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர சமூக வலைத்தளங்களுக்கு செல விட 150 கோடி ரூபாய் மற்றும் பிரச்சாரத்துக்கு 100 கோடி ரூபாய் என மொத்தம் 1000 கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்தது பாஜக. அதில் 4 கோடி ரூபாயை நயினார் நாகேந்திரன் ஆட்களிடமிருந்தும் 1 கோடி ரூபாய் இதர பாஜக வினரிடமிருந்தும் மாநில போலீசார் பிடித்தனர்.
பாஜகவினரைப் பொறுத்தவரை அவர்களுக்கு வருமானம் என்பது லோக்கல் வி.ஐ.பி.க்களிடம் மிரட்டி வசூலிக்கும் பெரும் தொகையைத் தாண்டி 5 வருடங்களுக்கு ஒருமுறை தேசியத் தலைமை கொடுக்கும் இந்தப் பணம் முக்கியமாகும். ஆகவே இந்த முறை தேசியத் தலைமை யிடமிருந்து வந்த பணத்தை என்னதான் செலவு செய்தாலும் பாஜக தமிழகத்தில் தேறாது எனத் தெரிந்து கொண்ட அந்த கட்சி நிர்வாகிகள் அப்படியே அமுக்கிக் கொண்டார்கள். இந்தப் பணம் எப்படி செலவு செய்யப்படு கிறது என்பதைக் கண்காணிக்க ஒரு கமிட்டி அமைக்கப் பட்டது. அந்தக் கமிட்டி உறுப்பினர் களாக அக்கட்சியின் மாநிலப் பொதுச் செய லாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில தலைவர் மற்றும் அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்கள் இருந்தனர். வந்த பணத்தில் பாதியை இவர்களே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். மிச்சப் பணம் தான் வேட்பாளர்களுக்குச் சென்றது. அதில் ஒரு பகுதிதான் கட்சிக்காரர்களுக்குச் சென்றது. தங்களுக்கு வந்த பணத்தை கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் வெளியே செல்லாமல் கமுக்கமாக இருந்து கொண்டார்கள். இதனால் ஒரு சில தொகுதிகள் தவிர தமிழகம் முழு வதும் தேர்தல் பூத்களில் உட்காரக் கூட பாஜக சார்பில் ஆட்கள் வரவில்லை. தேர்தல் அன்று நிகழ்ந்த இந்தச் சூழலைப் பார்த்த தேசியத் தலை மை, வேட்பாளர்களைக் கேள்வி கேட்டது. அதற்குப் பதில் சொல்லும் விதமாக வேட்பாளர் கள், கட்சி நிர்வாகிகள் மீதும், கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் மீதும் பரஸ்பரம் புகார் தெரி வித்து வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் போட்டியிட்ட அஸ்வத்தாமன் என்கிற வழக்கறிஞர் கொடுத்த கணக்கு பாஜக வட்டாரங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் திருவண்ணாமலையில் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்துக்கு 50 லட்சம் ரூபாய் செலவானது என அஸ்வத்தாமன் கணக்குக் கொடுத்துள்ளார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆயிரம் பேர். ஒரு ஆளுக்கு அவர் 5000 ரூபாய் கொடுத்தாரா எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள் பாஜகவினர். நல்லவேளை, யோகி ஆதித்யநாத் திரு வண்ணாமலைக்கு வர இருந்தார். அஸ்வத்தாம னைப் பற்றிய தகவல்கள் சரியாக இல்லை என்ப தால் யோகி தனது விசிட்டை கேன்சல் செய்தார். ஒருவேளை யோகி வந்திருந்தால் அவரது பொதுக் கூட்டத்துக்கு 5 கோடி ரூபாய் செலவானது என அஸ்வத்தாமன் கணக்குக் கொடுத்திருப்பார் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர். இது தவிர ‘பாஜக மாநிலத் தலைவர்’ மட்டும் இந்தத் தேர்தலில் கமுக்கமாக அடித்தது 1000 கோடி ரூபாய் என்கிறது கமலாலய வட்டாரங்கள். இந்தப் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கத் தான் கேரளா வுக்குப் பறந்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். நக்கீரன் இணையப் பதிவில் இருந்து.