புதுச்சேரி,ஜன.20- மக்களை சோதனை எலிக ளாக மாற்ற துடிக்கும் துணை நிலை பொறுப்பு ஆளுநர் புதுச்சே ரியை விட்டு வெளியேறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் வி.பெருமாள் தலைமை தாங்கி னார். மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் துவக்கி வைத்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பி னர்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல் வன், கொளஞ்சியப்பன், கலிய மூர்த்தி,சத்தியா, நகரச் செயலா ளர்கள் மதிவாணன், ராம்ஜி, பாகூர், மன்னாடிபட்டு, வில்லிய னூர் கொம்யூன் செயலாளர்கள் அன்புமணி, சரவணன், ராம மூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் கள் ராமசாமி, சங்கர், இளவரசி, தாட்சாயினி, ஆனந்த், சஞ்சய் உள்ளிட்டோர் உரையாற்றினர். புதுச்சேரியில் ரேசன் கடை களை திறக்க மறுக்கும் ஆளுநர், குடியிருக்கும் பகுதியில் ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி வழங்கி யதை கண்டித்தும் மாநிலத்தை சோதனை எலிகளாக மாற்ற துடிக்கும் பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனை புதுச்சேரியை விட்டு வெளியேறக்கோரி பதாகைகளு டன் முழக்கமிட்டனர். காரைக்கால் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் காரை பிரதேச செயலா ளர் தமீம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் வின்சென்ட் உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.