tamilnadu

img

நீதித்துறை சரியாக செயல்பட்டிருந்தால் அமித்ஷா ஒன்றிய அமைச்சராக பொறுப்பேற்றிருக்க மாட்டார்

கொல்லம், பிப்.18- இந்திய நீதித்துறை சரியாக செயல்  பட்டிருந்தால் அமித் ஷா ஒன்றிய உள்  துறை அமைச்சர் பதவியை எட்டி யிருக்க மாட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி கூறி னார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில மாநாட்டின் ஒரு பகுதி யாக ஏற்பாடு செய்யப்பட்ட, ‘அரச மைப்புச் சட்ட விழுமியங்கள் எதிர் கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்  பில் நடந்த கருத்தரங்கை துவக்கி  வைத்து அவர் பேசினார். அமித்ஷாவை  விசாரிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்த கோபால் சுப்ரமணியம் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை இழந்ததைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்களான நரேந் திர மோடியும், அமித் ஷாவும் மதத்தை  குடியுரிமைக்கான அளவுகோலாக மாற்  றியதன் மூலம் இந்திய அரசமைப்பை மனுஸ்மிருதியின் காலடியில் கட்டிப் போட்டுள்ளனர் என்று எம்.ஏ.பேபி கூறி னார். பார் கவுன்சில் முன்னாள் தலைவர்  இ.ஷாநவாஸ்கான் தலைமை வகித் தார். முன்னாள் அமைச்சர் முல்லைக்கர ரத்னாகரன் சிறப்புரையாற்றினார்.  ஒன்றிய-மாநில நிர்வாகக்குழு உறுப்பி னர் கே.ஓ.அசோகன் பேசினார். வர வேற்புக்குழு தலைவர் கே.சோமபிர சாத், பொது அழைப்பாளர் பி.கே.ஷிபு,  மாவட்ட ஊராட்சி துணைத் தலை வர் ஏ.சுமலால், மாநிலக்குழு உறுப்பி னர் கே.பி.சஜிநாத், மாவட்டத் தலைவர்  ஓசிரா என்.அனில்குமார், ஆ.சரிதா மணி லால் ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் சங்க மாநில துணைத் தலைவர் பாரிப்பள்ளி ரவீந்திரன் வர வேற்றார்.