தலைமைச் செயலாளரை இணைத்து நீதிமன்றம் உத்தரவு
கொடிக்கம்பம் அகற்றத்திற்கு எதிரான சிபிஎம் வழக்கு
மதுரை, ஜூன் 5 - கொடிக் கம்பங்களை அகற்று வதற்கு, இடைக்காலத் தடை கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறை யீட்டு மனு மீது வெள்ளியன்று விசா ரணை நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வைத்திருக்கும் கொடிக்கம்பங்க ளை அகற்ற வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.கே. இளந்திரையன் கடந்த ஜனவரி 27 அன்று உத்தரவு பிறப்பித்திருந் தார். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏப்ரல் 21 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளை பிரதி பலிக்கின்ற அடையாள சின்ன மாகும். அதை அகற்றச் சொல்வது ஜனநாயக மீறலாகும் என குறிப் பிட்டு, மேற்கண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மேல்முறை யீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டி ருந்தது. இந்த மனுவை ஏப்ரல் 25 அன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கோடை விடுமுறைக்கு பின் விசாரிப்பதாக தெரிவித்தது. அதன்படி ஜூன் 5 அன்று, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசார ணைக்கு வந்தது. அப்போது, கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டு மென பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு மனுவினை விசாரணைக்கு ஏற்று சிறப்பு அனுமதி (Leave Petition) மனுவை அனுமதித்து உத்தரவிட்டது. மேலும், அனைத்துக் கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டு மென ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தலைமை செயலாளர் கொடிக் கம்பங்களை அகற்றி தீர்ப்பை நிறைவேற்றிவிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டி ருந்ததால், தலைமை செயலா ளரை ஒரு தரப்பினராக வழக்கில் சேர்த்துக் கொள்ள உத்தர விட்ட நீதிமன்றம், இடைக்கால தடை உத்தரவு குறித்த கோரிக்கை யையும் வெள்ளிக்கிழமையே (06.06.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் ஆஜராகி வாதாடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரப்பில் வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி மற்றும் ஜூனியர் வழக்கறிஞர்கள் டி. அகத்தியா, எஸ். அருண்குமார், எஸ். சிவ சேகர், எம். கிஷோர், ஜே. கணேஷ், ஏ.ஆர். அகிலன், ஆர். ஜோஸ்வா, கே. மும்தா, கே. சுந்தரராஜ், எல். பிரதாப், ஆர். இளவரசன், ஆர். சிவபாரதி, ஜி.எம். ஸ்டாலின் ஆகியோர் ஆஜராகினர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.