சென்னை, ஜன. 24 - அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) மாநிலத் தலைவர் எஸ்.சுத்தானந்தம் உடல் நலக்குறை வால் திங்களன்று (ஜன.24) காலமானார். அவருக்கு வயது 74. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக்குழு உறுப்பி னராக பணியாற்றியதோடு, அறி வொளி இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்றவற்றி லும் தோழர் எஸ்.சுத்தானந்தம் பணி யாற்றினார். எல்ஜிசி முகவர்கள் சங்கம் (லிகாய்) அமைப்பை தமிழகத்தில் உருவாக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கி னார். லிகாய் அமைப்பை சிஐடியு- வுடன் இணைப்பதிலும் பெரும்பங் காற்றினார். தொழிற்சங்க அனுபவங் களை கொண்டு ‘பயணங்கள் முடிவ தில்லை’ என்ற நூலை எழுதி யுள்ளார். இவருக்கு 4 மகள்கள் உள்ள னர். தஞ்சாவூர் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.சிவகுரு இவரது மருமகன் என்பது குறிப்பிடத் தக்கது. தோழர் சுத்தானந்தம் தனது கண்களை சங்கரா நேத்ராலயா மருத்து வமனைக்கும், உடலை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கும் தானம் செய்திருந்தார்.
அதன்படி, உடல் மருத்துவமனைக்கு அளிக்கப் பட்டது. முன்னதாக, தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் என். சீனிவாசன், ஏ.பாக்கியம், எஸ். கண்ணன், கே. சுவாமிநாதன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் டி. செந்தில்குமார், லிகாய் பொதுச் செயலாளர் எஸ்.ஏ. கலாம், பொருளாளர் கே. தாமோதரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பிறகு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசிய தலைவர்கள், “சிபிஎம் தஞ்சை மாவட்டக்குழு உறு ப்பினராக பணியாற்றிய காலத்தில், கட்சி தொடர்பு இல்லாத கிராமங்க ளுக்கு சென்று தொடர்பை ஏற்படுத்தி னார். தமிழகம் முழுவதும் சென்று, உதிரியாக கிடந்த முகவர்களை திரட்டி சங்கத்தை கட்டமைத்தார். மேற்கு வங்கம், திரிபுரா சென்று ஒரு மாத காலம் தங்கி, அமைப்பை கட்டுவதற்கு வழிகாட்டினார். அகில இந்திய அளவில் புறக்கணிக்க முடியாத அமைப்பாக லிகாய் இருப்ப தற்கு, சுத்தானந்தம் போன்றவர்களின் உழைப்பும் உள்ளது.
‘வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும்’ என்று எல்ஐசியின் வாசகத்தை போன்று வாழ்ந்தார். வாழும்போது உழைக்கும் மக்களை திரட்டியும், இறந்த பிறகு உடல்தானம் செய்தும் வழிகாட்டியாக திகழ்கிறார். தன்னை பின்னுக்கு தள்ளி, இயக்கத்தை முன்னிறுத்தியவர். படர்ந்த மரத்திற்கு கீழ் புல் பூண்டு கூட முளைக்காது என்பதை மாற்றி, ஏராளமான தலை வர்களை உருவாக்கினார். அவரது புகழ், வழிகாட்டல்கள் அவரோடு பழகி யவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும்” என்று புகழஞ்சலி செலுத்தி னர்.