tamilnadu

img

தோழர் அ.தி.அன்பழகன் பணி நிறைவு பாராட்டு விழா

தோழர் அ.தி.அன்பழகன் பணி நிறைவு பாராட்டு விழா

நாகப்பட்டினம், ஜுன் 2-  நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளரும், உணவு பாதுகாப்புத்துறை அலுவலருமான அ.தி. அன்பழகன், பணி நிறைவு மற்றும் அரசு ஊழியர் சங்க பணி நிறைவு பாராட்டு விழா, நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.  அ.தி. அன்பழகன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அரசு ஊழியர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளராவும், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளராகவும், ஜாக்டோ- ஜியோ தேசிய உயர்மட்ட குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார்.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீண்ட லமாக அரசு ஊழியர் பிரச்சனைகளுக்கு ஆதரவாக நின்று களமாடியவர். பல கட்டப் போராட்டங்களை சந்தித்தவர்.  அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது.  இதையொட்டி நடைபெற்ற கருத்தரங்கத்தில் மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க பணிகள் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் சு. சிவகுமார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மு. சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் மு. அன்பரசு உள்ளிட்டோர் கருத்துரை ஆற்றினர்.  மாலையில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு மாவட்டப் பொருளாளர் ப. அந்துவன்சேரல் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சு. வளர்மாலா, மாநிலப் பொருளாளர் ச. டேனியல் ஜெயசிங், முன்னாள் மாநிலச் செயலாளர் எம். சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பாராட்டு உரை நிகழ்த்தினர்.  நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஆவணமான “தடம்”என்ற நூலை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி வெளியிட, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர். அ.தி. அன்பழகன் ஏற்புரை ஆற்றினார். மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் வே. சித்ரா நன்றி கூறினார்.