நாகர்கோவில், பிப்.1- தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலக்குழு கூட்டம் நாகர்கோவில் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் சிஐடியு மாநில உதவித் தலைவர் எம். சந்திரன் தலைமையில் நடை பெற்றது. மாநிலப் பொதுச்செய லாளர் எம். அசோகன் , மாநிலப் பொருளாளர் எஸ். சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டுறவு நூற்பாலைகளில் தேங்கியுள்ள நூல் வெளி மார்க் கெட்டில் விற்பனை செய்யலாம் என்பதற்காக ஆலை மட்ட நிர் வாக இயக்குநர்களின் தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் புகுந்துவிடக் கூடாது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து செயல்படவிடாமல் விற் பனை செய்ய வேண்டும். குழுவில் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளும் இணைக்கப்பட வேண்டும். கூட்டுறவு பஞ்சாலை களில் துவங்கியுள்ள சம்பளப் பேச்சுவார்த்தையை விரைந்து பேசி தீர்வு காணப்பட வேண்டும். பஞ்சாலைகளில் தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச கூலி ரூ. 477 கிடைப்பதை உறுதி செய்ய வேண் டும். குறைந்தபட்ச கூலிக் காக நிர்ணயம் செய்த குழு விரை வாக செயல்பட்டு பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு நியாய மான கூலி கிடைக்கச் செய்வது டன், பெண்களுக்கு இழைக்கப் படுகின்ற இன்னல்கள், வெளி மாநில தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல் தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என் பன உள்பட பல்வேறு தீர்மானங் கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.