tamilnadu

img

மதுரையில் சிஐடியு பொன்விழா கொண்டாட்டம்

மதுரை, மே 31- சிஐடியு 50-ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மதுரை புறநகர் மாவட்டத்தில் 35 இடங்களில் கொடியேற்றறப்பட்டது. பேரை யூர் தாலுகாவில் நடைபெற்ற கொடி யேற்று நிகழ்வில் மாவட்டச் செயலா ளர் கே.அரவிந்தன், சி.மணி கிருஷ்ணன் (கட்டுமானம்), எஸ். பாலு (பொது தொழிலாளர்), ராமர் (தையல்), தங்கவேல்பாண்டியன் (உள்ளாட்சி) பங்கேற்றனர்.  மேலூர் நகரில் மாவட்டத் தலை வர் செ.கண்ணன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். யா.ஒத்தக்கடையில் கட்டுமானசங்க மாவட்ட தலைவர் வி.பிச்சைராஜன் கொடிஏற்றினார். கஜேந்திரன், மனோ கரன், கலைச்செல்வன் பங்கேற்றனர். மேற்கு ஒன்றியத்தில் மூன்று இடங்க ளில் கொடியேற்றப்பட்டது, எம்.சௌந்தர், விஜயபாண்டி, ஜாகிர் உசேன் பங்கேற்றனர். எச்.பி ஆலை உட்பட சுமைப்பணி சங்கம் சார்பில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பி.பொன்ராஜ், சசிகுமார், வேல்முருகன், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டியில் இருளப்பன்(தையல்) தொழிலாளர் சங்கம் நிர்வாகி தலைமையிலும், உசி லம்பட்டியில் கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகி அறிவு தலைமையிலும் கொடியேற்றப்பட்டது. மின்வாரிய அலுவலகங்கள்கள் முன்பு நடை பெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் சங்க நிர்வாகி ஆர்.சுரேஷ், தனபாண்டியன், அய்யப்பன் பங்கேற்றனர். ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் அலுவலகம் முன்பு சி.பாண்டியன், அழகர்சாமி ஆகியோர் தலைமையில் கொடியேற்றப்பட்டது. மதுரை மாநகர் சிஐடியு சார்பில் 50 ஆண்டு பொன் விழா கொடி யேற்று நிகழ்ச்சி கோச்சடை கே.பி. ஜானகியம்மாள் படிப்பகம் அருகில் நடைபெற்றது தையல் சங்க மாவட்டத் தலைவர் கலையரசி கொடியேற்றி னார். சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் இரா .லெனின், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பகுதிக்குழுச் செய லாளர் கு.கணேசன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜெ.பார்த்த சாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். சிஐடியு மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடி யேற்று நிகழ்ச்சியில் சாலையோர வியாபாரிகள் சங்க பொதுச்செய லாளர் சந்தியாகு கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் கணேசன் செய லாளர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.