சென்னை,ஏப்.8- பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று (ஏப்.8) ஹைதராபாத்திலிருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை விமான நிலை யத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த வுடன் பிரதமர் அங்கிருந்து 3.25 மணிக்கு விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடை யாறு கடற்படை தளத்துக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்று, மாலை 4 மணிக்கு சென்னை - கோவை இடை யிலான ‘வந்தே பாரத்’ அதி விரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.