சென்னை, ஜூன் 25- ஜுலை 1 முதல் 25 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் முதல மைச்சர் கோப்பைக்கான மாநில அளவி லான போட்டியை வருகிற 30 ஆம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கி றார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 2023 பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் வரை நடை பெற்றது. இதில் 3 லட்சத்து 76 ஆயிரத் திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டதில் 27,000-க்கும் மேற்பட் டவர்கள் மாநில அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை யில் 17 இடங்களில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை முதல மைச்சர் கோப்பை மாநில அளவி லான விளையாட்டுப் போட்டிகள் நடை பெறுகின்றன. இதன் தொடக்க விழா ஜூன் 30 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடை பெறுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டிகளில் பங்கேற்கும் 27,000-க்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்று நர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார் வலர்கள் அனைவருக்கும் போட்டி நடை பெறுகின்ற அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு வசதியாக தனியார் விடுதி கள் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை ஆகியவைகளில் 2000-க்கும் மேற்பட்ட அறைகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
மேலும் மேலக்கோட்டையூரிலுள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மாணவர் விடுதிகளிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களில் காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதி களுக்கு செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் மருத்துவ வசதி ஏற்பாடுகள் சிறந்த முறையில் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கை ளும் எடுக்கப்பட்டுள்ளது. போட்டிகளை சிறப்பாக நடத்திட ஏதுவாக இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.