தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துவிட்டது. ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தலை வர்களும் வேட்பாளர்களும் தீவிர மாக ஆதரவு திரட்டி வருகின்ற னர். தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மார்ச் 22 அன்று, திருச் சிராப்பள்ளியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்.
பாஜக ஆட்சியை அகற்றுவோம்
“எங்களுக்கு இரண்டு எஜ மானர்கள் உண்டு. ஒன்று எங்கள் மனசாட்சி, மற்றொன்று நாங்கள் மதிக்கும் மக்கள் என்றார் அண்ணா. அதுபோல, இந்திய அர சியல் சட்டத்தின் முகப்புரை யில் கூறப்பட்டுள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஜனநாய கக் குடியரசு என்னும் கோட்பாடு களுக்கு எதிராக நாட்டை சாதி, மத உணர்வுகளுடன் பிளவு படுத்திவிட்டது பாஜக ஆட்சி என எங்களின் மனசாட்சி சொல் கிறது என்ற அடிப்படையில் ஒன்றிய பாஜக ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன், தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரத்தைத் துவங்கினார். மக்களை நேருக்கு நேராக சந்தித்து, பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக நாடு கண்ட அவலங்களைப் பட்டிய லிட்டும், 5 ஆண்டுகளாக கட்டப் படாத எய்ம்ஸ் மருத்துவ மனை, நிதி ஒதுக்கீடு செய்யாத தால் நிற்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், திட்டமிட்டு குறைக்கப்படும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, 8 மாவட்ட மழை வெள்ளப் பாதிப்புக்கு ரூ. 37 ஆயிரம் கோடி கேட்டும் ஒரு பைசா கூட வழங்காதது என தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விளக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
மக்களின் முதல்வர்....
அத்துடன், காலையில் அங்காங்கே நடைப்பயிற்சி களை மேற்கொண்டு, மக்கள் அதிகம் கூடும் காய்கறிச் சந்தை போன்ற இடங்களுக்குச் சென்று மக்களை நேருக்கு நேர் சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்கிறார். முதல்வரின் இத்தகைய பிரச்சாரம், எளிமையான அவ ருடைய அணுகுமுறைகளும் இந்தியா கூட்டணியின் செல்வா க்கினை மக்களிடையே வளர்த் துள்ளது. பாஜக முதலான கட்சி களுக்கு எதிரான சிந்தனை களையும் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், திருச்சி யில் தொடங்கிய தேர்தல் பிரச்சாரப் பயணம் இதுவரை திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தூத்துக்குடி, ராம நாதபுரம், தென்காசி, விருது நகர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு நீண்டுள்ளது. இதுவரை இந்தப் பய ணத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்காக ஏறத்தாழ 1,930 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ள முதல்வர் ஏறத்தாழ 2 கோடி மக்களிடம் பிரச்சாரத்தை முடித்துள்ளார்.