tamilnadu

img

செஸ் ஒலிம்பியாட் பிரம்மாண்ட பயிற்சி ஆட்டம் 707 பேர் உற்சாக பங்கேற்பு

சென்னை, ஜூலை 24- மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பி யாட் போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஞாயிறன்று (ஜூலை 25)  பிரமாண்ட பயிற்சி ஆட்டம் நடை பெற்றது. நோபல் உலக சாதனை படைப்பதற்காக 1414 பேர் பங்கேற்க கூடிய இந்த அரங்கில், 707 போர்டு களில் வீரர், வீராங்கனைகள் செஸ் விளையாடினர். 707 போர்டுகளில், விளையாடும் போட்டியை ஆன்லைன் மூலமாக உலகம் முழு வதும் பார்க்கக்கூடிய வகையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்,

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முதன்மை தலைமை செயலர் இறையன்பு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.  பின்னர் அமைச்சர் மெய்ய நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடியும், முதல மைச்சர் மு.க. ஸ்டாலினும் சென்னை யில் தொடங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரமாண்டமாக இருக்கும். இந்த போட்டி மூலம் இந்தியாவின் நீண்ட நாள் கனவு இன்று இந்த மண்ணில் நிறைவேற்றி இருக்கிறது என்று செஸ் நடுவர்கள் தெரிவித்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியா வுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள் ளது.  செஸ் ஒலிம்பிக் சுடர் ஓட்டம்  செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் முதல் முறையாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கோவை, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை ஆகிய இடங்களில் ஜோதி கொண்டு வரப்பட்டு இறுதியில் போட்டி நடை பெறும் மாமல்லபுரத்திற்கு வந்தடை யும். இவ்வாறு அவர் கூறினார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அலு வலர்கள் உடனிருந்தனர்.

செஸ் ஒலிம்பிக் சுடர் ஓட்டம்

 செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் முதல் முறையாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கோவை, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை ஆகிய இடங்களில் ஜோதி கொண்டு வரப்பட்டு இறுதியில் போட்டி நடை பெறும் மாமல்லபுரத்திற்கு வந்தடை யும். இவ்வாறு அவர் கூறினார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அலு வலர்கள் உடனிருந்தனர்.