tamilnadu

சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவடைகிறது

சென்னை,மார்ச் 5- ஆசியாவிலேயே மிகப் பெரிய புத்தகக்  காட்சியாக கருதப்படும் சென்னை புத்தகக்  காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.  மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கி  வைத்தார். 800 அரங்குகளில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம்  19 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்ட இந்த புத்தக கண் காட்சி  இன்றுடன்  (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற வுள்ளது. சென்னை புத்தகக் காட்சிக்கு இது வரை 12 லட்சம் வாசகர்கள் வருகை தந்து ள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் காட்சியாக கருதப்படும் சென்னை  புத்தகக்காட்சிக்கு இன்றும், நாளையும் வாசகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.