tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘கைக்கூலிகளுக்கு பறிபோனது

சென்னை: தந்தை பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில்  மக்கள் பாடம் புகட்டி இருக்கிறார்கள். ‘இருநூறு இலக்கு’ என்ப தற்கான தொடக்க வெற்றியாக அமைத்திருக்கிறது ஈரோடு கிழக்கு. தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டின் கிழக்கு தொகுதி  மக்கள் திமுகவிற்கு மகத்தான வெற்றியை வழங்கி இருக் கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இலங்கை கடற்படை அட்டூழியம்

இராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி  தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி –  தலைமன்னார் அருகே 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய் யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்கிறது.

ரயில்வே ஐஜி ஆய்வு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஐஜி ஏ.ஜி.பாபு ஆய்வு மேற்கொண்டார். வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தின் எதி ரொலியாக, அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொள்கின்றனர். பாதுகாப்பான ரயில்  பயணம் தொடர்பாக, விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர்.

அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசா ரணை நடத்தியது. ஆணையத்தில் 3,900 வழக்குகள் நிலு வையில் உள்ளன. கூடுதல் உறுப்பினர் நியமனக் கோரிக் கையை நிதி நெருக்கடி காரணமாக அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்து பிப்.14 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். 72 இடங்களில் கண்டன  கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆசிரியர் சம்பளம், நூறுநாள் வேலைத்திட்டம் போன்றவற்றுக்கு நிதி வழங்காமல் ஒன்றிய அரசு புறக்கணிப்பதாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னு ரிமை வழங்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

கோவிலை ஆக்கிரமிக்க முயற்சி?

பரமக்குடி: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள திருவேட்டை உடைய அய்யனார் கோவிலை வடிவேலு வின் ஆதரவாளர் பாக்யராஜ் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், காட்டு பரமக்குடி கிராமத்தின் பூர்வீக கோயிலாகவும் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி,  கோவிலுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளனர்

பழனியில் குவியும் பக்தர்கள் பழனி:

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா  நடைபெற்று வருகிறது. திங்களன்று திருக்கல்யாணமும், செவ்வாயன்று தைப்பூசம் மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ஏராள மான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஒருவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார்  3,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பறவைகள் பூங்கா திறப்பு திருச்சி:

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் ரூ.18.63  கோடியில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிறன்று திறந்து வைத்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை  சார்பில் பறவைகள் பூங்காவை திறந்து வைத்து உதயநிதி ஸ்டா லின் பார்வையிட்டார். நிகழ்வில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆண்மை பரிசோதனை வேண்டாம்!

சென்னை: பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மைனர்களுக்கு இடையிலான காதல் திருமணம்  மற்றும் பாலியல் வழக்குகளில், சிறார் நீதி வாரியம் இயந்திரத் தனமாக உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது. குற்றம் சாட்டப் பட்டவர் குற்றத்தை மறுக்கும் போது மட்டுமே ஆண்மை பரி சோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.