சென்னை, பிப்.12- சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர் ்களில் 11 ஆயிரத்து 971 நபர்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட் டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட வுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 2 கட்டங்க ளாக 21 இடங்களில் ஏற் கனவே நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட அலுவலர் ்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் 16 ஆயிரத்து 657 நபர்களுக்கு தபால் வாக்குகளுக்கான படிவம் 15 வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள நபர்கள் ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர். படிவம் 15 வழங்கப்பட்ட 16 ஆயிரத்து 657 நபர்களில் 13ஆயிரத்து 170 நபர்கள் சென்னை மாநகராட் ்சிக்கு உட்பட்ட 200 வார்டு களுக்கான வாக்காளர் ்பட்டியலிலும்,3ஆயிரத்து 487 நபர்கள் பிறமாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப் புகளின் வாக்காளர் பட்டிய லிலும் இடம் பெற்றுள்ளனர். சென்னை மாநகராட் சிக்கு உட்பட்ட 200 வார்டு களுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, தபால் வாக்கு செலுத்த படிவம் 15 வழங்கியுள்ள 13 ஆயிரத்து 170 நபர்களில் 11 ஆயிரத்து 971 நபர்களுக்கு தபால் வாக்குகள் அவர் களின் முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட் டுள்ளது. மீதமுள்ள நபர்க ளுக்கு தபால் வாக்குகள் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித் துள்ளது.