tamilnadu

வேட்புமனு தாக்கல் தொடங்கியது

சென்னை,ஜன.28- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக  நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளியன்று(ஜன.28) தொடங்கியது.  சென்னை மாநகராட்சி க்குட்பட்ட 200 வார்டுகளுக்கு 37 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.திமுக, அதிமுக கூட்டணியில் இன்னும் வார்டு பங்கீடு  பேச்சுவார்த்தைகள் முடிந்து யார், யார் போட்டி யிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. இதன் காரணமாக முதல் நாளில் அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. சுயேச்சை யாக களம் இறங்குபவர்களே வேட்பு மனுக் களை தாக்கல் செய்தனர். சென்னை மாநகராட்சி பகுதிகளை போன்று  நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வேட்பு மனு தாக்கல்  தொடங்கியது. அனைத்து  மாவட்டங்களிலும் சுயேச்சை வேட்பாளர்க ளும், ஒரு சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்க ளும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 4 ஆம் தேதி கடைசி  நாளாகும்.  சனிக்கிழமை பணி நாள் என்ப தால் அன்றைய தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என  ஏற் னவே தேர்தல் ஆணையம் தெரி வித்துள்ளது.