tamilnadu

img

பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவைகளை ஒதுக்கீடு செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுதில்லி, டிச. 14- பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி, 5ஜி சேவைகளை ஒதுக்கீடு செய்திட விரைவாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளு மன்ற நடத்தைவிதி 377ஆவது பிரிவின்கீழ், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை களை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது: தனியார் தொலைத்தொடர்பு நிறு வனங்கள் தங்களது 5ஜி சேவைகளை விரைவாக அளிக்கும் நிலையில் அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4 ஜி சேவைகளைக்கூட அளிக்காமல் இருப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு அதிவேக தரவு சேவை அளிப்பதிலும்  பின்தங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் 77 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ் என்எல் நிறுவனத்திடம் சேவைகள் பெறு வதிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான், அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எதிர்காலம் சம்பந்தமாக இரண்டு முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.  முதலாவது, பிஎஸ் என்எல் நிறுவனத்தின் 4ஜி, 5ஜி சேவைகள். இரண்டாவது, பிஎஸ்என்எல்-க்கான 3 வது மறுமலர்ச்சி தொகுப்பு. அரசின் இந்த முடிவுகளுக்கு ஒத்த வகை யில் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி/5ஜி சேவைகள் பற்றி சில அறிவிப்புகளை அறிவித்துள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனம் 200 தளங்களுடன் கூடிய 4ஜி சேவைகளை வெளியிட துவங்கியுள்ளது. மூன்று மாத சோதனைகளுக்கு பிறகு ஒரு நாளைக்கு சராசரியாக 200 தளங்கள் வீதம் வெளியிடத் துவங்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட் வொர்க், 5ஜி நெட்வொர்க்காக, 2023 நவம்பர் – டிசம்பர் மாதங்களில் தரம் உயர்த்தப்படும். இந்த விஷயத்தின் உண்மை என்னவெனில், அக்டோபர் 2024 ல் மட்டுமே தனது 4ஜி சேவைகளை துவங்கும் நிலை யில் பிஎஸ்என்எல் இருக்கும். இதன் காரணம் என்னவெனில், நிறுவனம் தனது 4ஜி சேவைகளுக்கான உபகரணங்களை டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services) நிறுவனத்திட மிருந்துதான் கொள்முதல் செய்யவேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இந்த 4ஜி உபகரணங்களை அளிப்பதற்கு இன்னும் தொடங்கவே இல்லை. டாட்டா கன்சல் டன்சி சர்வீசஸ் நிறுவனம் இந்த 4ஜி உபகரணங்களை முழுமையாக அளித்து நிறுவியும் கொடுப்பது என்பது 2024 அக்டோபர்க்கு முன்பு நிகழாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4G சேவைகளை துவங்கும் சமயம், வாடிக்கையாளர் பெரும்பா லானோர் பிஎஸ்என்எல் சேவையை விட்டு விலகி விடுவார்கள். தனது தற்போதைய 4ஜி உபகர ணங்களையே, மென்பொருள் தரமுயர்த்து தல் மூலம் 4ஜி-க்கான உபகரணங்களாக மாற்றி, இரண்டு வருடங்களுக்கு முன்பே பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி  சேவைகளைத் துவங்கியிருக்க முடியும்.  ஒரு லட்சம் 4ஜி BTS (Base Trans ceivers Station) களை கொள்முதல் செய்ய  ஏப்ரல் 2020இல் பிஎஸ்என்எல் நிறுவனம் டெண்டர் கோரியது. பின்னர், வெளிநாட்டு  விற்பனையாளர்களிடமிருந்து 4ஜி உபகரணங்களை, பிஎஸ்என்எல் நிறுவனம் கொள்முதல்  செய்யக்கூடாது எனக் கூறி அரசு இந்த டெண்டர்களை ரத்து செய்தது. ஆனால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோட போன் ஐடியா போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைத்தொடர்பு ஜாம்பவான்களுடன் போட்டியிட பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சமமான தளத்தை அளிக்காமல், தங்களது 4ஜி & 5ஜி உபகரணங்களை வெளிநாட்டு விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்தன. எனவே, அரசுக்கு சொந்தமான பிஎஸ் என்எல் நிறுவனத்திற்கு 4G/5G சேவைக ளை ஒதுக்கீடு செய்ய விரைவான நட வடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.