கொரோனா தொற்றிலிருந்து மக்களின் உயிரி ழப்பைத் தடுத்த நாடுகளில் ஆஸ்திரேலியா வும் ஒன்றாகும். தொற்றின் எண்ணிக்கை அதிக மாக இருந்தபோதிலும் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்து வந்தது. திடீரென்று ஒரே நாளில் 77 பேர் உயி ரிழந்தது ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை வட்டாரங்க ளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்று துவங்கிய நாள் முதல் இதுவரையில் 2 ஆயிரத்து 776 பேர் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவராக ராபர்டா மெட்சோலா தேர்வு செய்யப்பட்டிருக்கி றார். 43 வயதாகும் மெட்சோலா மொத்தம் பதிவான 690 வாக்குகளில் 458 வாக்குகளைப் பெற்றார். அவ ருக்கு எதிராகப் போட்டியிட்ட பசுமைக்கட்சியின் வேட்பாளராக அலைஸ் குன்பே 101 வாக்குகளைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மெட்சோலா, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மூன்றா வது பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் 5 லட்சத்து 5 ஆயிரத்து 511 தெற்கு சூடான் அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளார்கள் என்று அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் தெரிவித்துள்ளது. சொந்த நாட்டிற்குத் திரும்பியதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது 37 விழுக்காடு தெற்கு சூடான் மக்கள், பாதுகாப்பு நிலைமை முன்னேற்றம் அடைந்ததையே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.