பட்டுக்கோட்டையிலே பிறந்து பாட்டுக்கோட்டையாக பரிணமித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பிறந்த நாள் இன்று.இருபத்தொன்பது ஆண்டுகள் மட்டுமே இம் மண்ணுல கில் வாழ்ந்து மறைந்த மகத்தான கவிஞர் திரையுலகில் பயனித்தது வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே. இந்த ஆறு ஆண்டுகளில் 57 திரைப் படங்களுக்கு பாடல் எழுதிய அவர் 182 பாடல்களை மட்டுமே தந்து சென்றி ருக்கிறார். ஆனாலும் அதில் பெரும்பான்மை பாடல்கள் சாகா வரம் பெற்ற அமர கவிதைகள். அவருடைய பாடல்களில் இடம்பெற்ற அரசியல் கருத்துக் கள் அவர் ஏற்றுக்கொண்ட பொதுவுடமைத் தத்துவம் போல் மிகவும் வலிமையானது. இன்றைக்கும் பொருந்தக்கூடியது. எல்லா வளங்களும் பெற்றது நம் தாய் நாடு. என்ன வளம் இங்கே இல்லை.. எவ்வளவு இனிமையான தேசம் இது என்பதை கவிஞர் மிக அழகாகச் சொல்லுகிறார்..
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே - அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே மூணு பக்கமும் கடல் தாலாட்டுது - தன் மானமுள்ள மக்களைப் பாராட்டுது வானுயரும் மலையில் அருவி பெருகியே வந்து வந்து நிலத்தை நீராட்டுது - பல வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது.. -என்கிறார். இப்படி உள்ள தேசம் இன்று எப்படி இருக்கிறது. தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது..
இந்த இரண்டு வரிகளில் எத்தனை வேதனை பார்த்தீர்களா.. இதற் கெல்லாம் யார் காரணம். யாரால் இந்த நாடு இப்படி போனது. நமக்கும் தெரியும் தானே.. இதோ கவிஞரின் வரிகளில்.. சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச் சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச் சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா புதிரான உலகமடா - உண்மைக்கு எதிரான உலகமடா - இதில் பொறுமையைக் கிண்டிவிடும் போக்கிரிகள் அதிகமடா குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா.. நீதிதனை தூக்கி எறிந்துவிட்ட சுயநலக் கூட்டத்தின் சூழ்ச்சிதான் இதற்கு காரணம் என்பதை இன்றளவுக்கும் பொருந்தும் விதமாக கவிஞர் அன்றே எவ்வளவு தீர்க்கமாக சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா. பொய்களை அவிழ்த்துவிட்டு வாயால் உலகளக்கும் மகாதேவனின் அண்டப் புளுகையும் அவரோடு லாவணிபாடி நாட்டை ஏமாற்றும் கூட்டத்தை யும் பாடல்களின் வரிகளால் இப்படி அன்றே பதிவு செய்து சென்றி ருக்கிறார்; மக்கள் கவிஞர்.
கல்லால் இதயம் வைத்து கடும் விசத்தால் கண்ணமைத்தது கணக்கில்லாப் பொய்களுக்குக் காரணமாய் நாக்கமைத்துக் கள்ள உருவமைத்துக் கன்னக்கோல் கையமைத்து நல்லவரென்றே சிலரை - உலகம் நடமாட விட்டதடா... என்றும் இன்னொரு பாடலில் ... புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை - இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம் ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம் உளறி என்ன கதறி என்ன?
ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா என்றும் சொல்லியிருக்கிறார். அவரது பாடல்களில் இன்னும் இதுபோல் எவ்வளவோ இருக்கிறது.. குறுக்கு வழியில் அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வர ஒரே நாடு ஒரே தேர்தல் ஓரே வரி ஒரே ரேசன் கார்டு என்றெல்லாம் கவர்ச்சியாக பேசி மக்களை ஏமாற்றிவிட்டு ஒற்றுமையோடு ஒரே உணர் வோடு அண்ணன் தம்பிகளாக வாழும் மக்களை மதவாதம் பேசி விரோதிக ளாக்கும் இன்றைய அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியை கண்டு ஏமாற வேண்டாம் என்பதை பல பாடல்களில் சொல்லியிருக்கிறார்.
கடவுள் உண்டு என்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு -தினம் கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே கருத வேண்டியதை மறந்தாச்சு - பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு கையாலே முன்னேற்றம் கண்டாகணும். திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கனும் அண்ணாச்சி நாம ஒன்னாயிருக்கனும் அண்ணாச்சி
உள்ளதையும் உண்மையையும் சொல்வோர் மீது இன்றைய ஆட்சி யாளர் நிலை வழக்கு சிறை என்பதுதானே.. இதோ அதுவும் கவிஞரின் வரிகளில்..
உள்ளத சொன்னா ஒதைதான் கெடைக்கும் ஒலகம் இதுதாண்டா - ராஜா ஒலகம் இதுதாண்டா உள்ளத் துணிவோடு பொய் சொல்லுவோர்க்கு உல்லாச புரிதாண்டா ராஜா உல்லாச புரிதாண்டா சரி.. இத்தகைய அடக்குமுறைகளுக்கும் ஆணவத்திற்கும் விடிவே
பிறக்காதா என்ன? நிச்சயம் பிறக்கும். எப்போது? இதோ.. உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும் பொறுமை ஒருநாள் புலியாகும் அதற்கு பொய்யும் புரட்டும் பலியாகும் ஆமாம். ஒடுக்கப்படும் மக்களின் அறிவுக்கதவு சரியாக திறந்துகொள் ளும் போது நிச்சயம் மாற்றம் வரும். உலகப் புரட்சிகள் இப்படித்தான் கட்டியம் கூறுகின்றன. நம் நாட்டிலும் அந்த மாற்றம் வரும். அப்போது.. ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே எக்காளம் போடுற கூட்டம் - நாட்டில் எக்காளம் போடுற கூட்டம் மக்கள் எதிர்த்துகிட்டா எடுக்கணும் ஓட்டம் அதற்காக... நாம்... ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும் தேதியில் தோன்றும் பொறுமை சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால் தாரணியில் அது புதுமை உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை நேசமும் அன்பும் நிலையாக வேண்டும் நேர்வழி வேண்டும் உறவில் பேசிடும் அன்பும் செயல் முறையானால் பேரின்பம் வேறெது உலகில் காணா வளமும் மாறாத நலமும் கண்டிடலாம் அன்பு நிலையில்..
பாமர தமிழில் சொல்லெடுத்து இலக்கியம் படைத்திருக்கிறார். இன் றைய இளைஞர்கள் அவரது பாடல்களை தேடி படியுங்கள். படித்தால்... நன்றிகெட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம் நாவினிக்க பொய்யுரைக்கும் பேரை நம்ப மாட்டோம் என்று கூறுவோமடா.. ஒன்று சேருவோமடா.. வீறுகொண்டு சிங்கம்போல் முன்னேறுவோமடா.. வஞ்சனைக்கும் அஞ்சிடோம்.. பஞ்சம் நோய்க்கும் அஞ்சிடோம்.. பட்டினிக்கும் அஞ்சிடோம்.. நெஞ்சினை பிளந்தபோதும் நீதி கேட்க அஞ்சிடோம். நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்.. காலி என்றும் கூலி என்றும் கேலி செய்யும் கூட்டமே.. காத்துமாறி அடிக்குது நீர் எடுக்க வேண்டும் ஓட்டமே.. என்று அநீதிக்கெதிராக போராட வீரம் பிறக்கும். உமக்குள் வீரியம் முளைக்கும்... கோபத்தின் உச்சம் கிடைக்கும். அது துரோகத்தின் வாழ்வை எரிக்கும்...
எஸ்.சுதந்திரன், திண்டுக்கல்