tamilnadu

அவினாசிலிங்கம் பல்கலை. ஓய்வூதியர்களுக்கு ரூ.8 கோடி ஓய்வூதியம் விடுவிப்பு

புதுதில்லி, டிச.5- கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் ஓய்வூதியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ. 8 கோடி  தற்போது விடுவிக்கப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை  மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவை யில் கேள்வி நேரத்தின்போது, பி.ஆர்.நட ராஜன், கோயம்புத்தூரில் உள்ள அவினாசி லிங்கம் பல்கலைக் கழகத்தில் 2016-க்கு முன் ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை எவ்வ ளவு என்றும், ஓய்வூதியம் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்றுகூறப்படுகிறதே, அதன் விவரங்கள் என்ன என்றும், அவற்றை அளிப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடி க்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார்.  இதற்கு எழுத்து மூலம் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில் , அவினாசிலிங்கம் பல்கலைக்கழ கத்தில் 2016-க்கு முன் ஓய்வு பெற்றவர்கள் 147 பேர் என்றும், இவர்களின் ஓய்வூதிய நிலு வைத்தொகை 800 லட்சம் ரூபாயை பல் கலைக் கழக மானியக்குழு விடுவித்திருக் கிறது என்றும் தெரிவித்தார்.  (ந.நி.)

;