விழுப்புரம்,பிப்.10- விழுப்புரம் அருகே கண்டாச்சி புரம் காவல் சரகம் ஒதியத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி (40). அதே ஊரில் வசிக்கும் எமிலிமேரி சத்துணவு கூடத்தில் பணி செய்கிறார்.இவர் சத்துணவு கூடத்தில் வேலை வாங்கித்தருகி றேன். பணம் கொடு என்று டெய்சி யிடம் கேட்டுள்ளார். என்னிடம் பணம் இல்லை என்று டெய்சி கூறவே, நகையை அடமானம் வைத்தாவது பணம் கொடு, நான் நிச்சயமாக சத்துணவு கூடத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று எமிலிமேரி டெய்சியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய டெய்சி 4 பவுன் தங்கச் சங்கிலியை கடந்த டிசம்பர் 26 அன்று எமிலிமேரியிடம் கொடுத் துள்ளார். இதையடுத்து எமிலிமேரியிடம் வேலை எப்போது கிடைக்கும் என்று சில தினங்களுக்கு முன்பாக டெய்சி கேட்டார். இதற்கு எமிலிமேரி சரியான பதில் கூறவில்லை. அதிர்ச்சி யடைந்த டெய்சி இது தொடர்பாக கண்டாச்சிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே டெய்சி 3 பெண் குழந்தை களுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து மேலே ஊற்றிக் கொண்டார். மேலும், 3 பெண் குழந்தைகள் மீது ஊற்ற முயற்சித்தார். அங்கு பாதுகாப்பு பணி யில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பிறகு, இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.