புதுதில்லி, டிச.15- இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவைக் கண்டு வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென் செக்ஸ் செவ்வாயன்று 166 புள்ளிகள் சரிந்த நிலையில், புதனன்று மேலும் 330 புள்ளிகள் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இதேபோல தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிப்டி-யும் 103 புள்ளிகள் அளவிற்கு சரிந்துள்ளது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 54.52 புள்ளிகள் அதிகரித்து, 58,171.61 புள்ளி களாகவும், நிப்டி 9.60 புள்ளிகள் அதி கரித்து, 17,334 புள்ளிகளாகவும் காணப்பட்டது. 1461 பங்குகள் ஏற்றத்தி லும், 524 பங்குகள் சரிவிலும், 90 பங்கு கள் மாற்றமில்லாமலும் காணப்பட் டன.
ஆனால், அதன்பிறகு பங்குச் சந் தைகள் அடி வாங்கின. நிப்டி குறியீட்டில் உள்ள என்டிபிசி, கோடக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, லார்சன், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் லாபமீட்டிய நிலையில், பஜாஜ் பைனான்ஸ், டிவிஸ் லேப், பஜாஜ் பின்செர்வ், அதானி போர்ட்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் இழப் பைச் சந்தித்தன. சென்செக்சில் என்டி பிசி, கோடக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, எம் &எம், பஜாஜ் ஆட்டோ உள் ளிட்டவை ஏற்றத்தையும், பஜாஜ் பைனான்ஸ், டிவிஸ் லேப், பஜாஜ் பின்செர்வ், இன்போசிஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் இழப் பையும் சந்தித்தன. அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அறிவிப்புக் காக உலகளாவிய அளவில் முத லீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். பெடரல் வங்கி நிச்சயமாக வட்டி விகி தத்தை உயர்த்தும் என்று எதிர்பார்ப்ப தால், அவர்கள் ஊசலாட்டத்தில் உள்ளனர்.
இதுவே இந்திய பங்குச் சந்தைகளின் தடுமாற்றத்திற்கு கார ணம் என்று கூறப்படுகிறது. ஒமைக் ரான் அச்சமும் முக்கியக் காரணியாக பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, டிசம்பர் 14 அன்று மட்டும் 763.18 கோடி ரூபாய் அளவிற்கான அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தைகளை விட்டு வெளியேறியுள்ளன.