tamilnadu

img

தொழிலாளர்களின் தோழராக...மக்களின் தொண்டராக… - ஜி.ராமகிருஷ்ணன்

மதுரை மாவட்ட த்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடிப் படையாக அமைந் தது பஞ்சாலைத் தொழிலாளர் இயக்கம். அந்த வட்டாரத்தின் பஞ்சாலைகளில் தொழிலாளி களாக வேலையில் சேர்ந்து, வீரமிக்க போராட்டங் களில் பங்கேற்று வர்க்க உணர்வு பெற்ற வர்களாக உருவெடுத்த ஏராளமானோர் கம்யூ னிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இணைந் தார்கள். இவ்வாறு மெஜூரா கோட்ஸ் (மதுரை கோட்ஸ்) பஞ்சாலையில் ஒரு தொழிலாளி யாகச் சேர்ந்து, தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு, பல போராட்டங்களில் கலந்துகொண்டவர், இந்தப் பின்னணியோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமானவர் தோழர் பி. தங்கபாண்டி. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், நாட்டார் மங்கலம் கிராமத்தில் 1941ஆம் ஆண்டு ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தங்கபாண்டி. இவர் பிறந்த 6வது மாதத்திலேயே தந்தையார் இறந்துவிட இவரும், இவருடைய மூத்த சகோதரரும் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தனர். விவசாயத்திலிருந்து போதிய வருமானம் கிடைக்காத நிலையில் வேறு கூலி வேலை களும் செய்தே குடும்பம் வாழ்ந்தது. தங்க பாண்டிக்குப் பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். 1960 ஆண்டு தங்கபாண்டி - காமாயி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிடைத்த வருமானத்தில் தாக்குப் பிடிக்க  முடியாத சூழலில் ஒரு வயதுக் குழந்தை யோடு இவரது குடும்பம் மதுரை வந்து சேர்ந்தது.

1964ஆம் ஆண்டு மதுரை கோட்ஸ் ஆலை யில் வேலையில் சேர்ந்தார். முதல் நாள்  வேலைக்கு செல்கிறபோதே ஆலை வாயி லில் தொழிலாளர் கூட்டம் நடந்துகொண்டி ருந்தது. தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் தொழி லாளர்களை வஞ்சித்துக்கொண்டிருந்த ஆலை நிர்வாகத்தைக் கடுமையாகத் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தார். “அதைக் கேட்டுக் கொண்டேதான் வேலைக்குப் போனேன்,” என்கிறார் தோழர் தங்கபாண்டி. ஆலையில் இரண்டாண்டு காலம் ஊதிய உயர்வு ஏதுமின்றி 2 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்தார். தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்த வேண்டு மென்று சிஐடியு சங்கத்தினர் ஆலைக்குள் சக தொழிலாளர்களிடையே பேசினார்கள். தொழிலாளர்களுக்காகப் போராடும் இந்த சங்கத்தில் சேருவது என முடிவெடுத்தார். சங்க அலுவலகத்திற்கு சென்றபோது அங்கே தோழர்கள் வி. கார்மேகம், பி.எம். குமார் ஆகியோரைச் சந்தித்தார். அவர்களிடம் பிரச்சனைகளைச் சொன்னபோது அவர்கள் இருவரும் வழங்கிய ஆலோசனைகள் மிகுந்த நம்பிக்கை அளிக்க, சங்கத்தில் இணைந்தார். தொழிற்சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று கூலி உயர்வுக்கான வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது. அப்போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்த தோழர்களில் ஒருவராகப் பங்களித்தார் தோழர் தங்கபாண்டி. “நிர்வாகம் இரண்டு ரூபாய் கூலியை நான்கு ரூபாயாக உயர்த்துவதாகச் சொன்னது. அதை சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. வேலை நிறுத்தம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் தொழிற்சங்கத்தோடு நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் மாதம் ரூ.180/- என ஒப்பந்தம் ஏற்பட்டது,” என்று, சக  தொழிலாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்திய அந்தப் போராட்டத்தின் வெற்றியை நினைவுகூர்கிறார்.

தொழிலாளர் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது தொழிற்சங்கத் தலை வர்கள் அல்லாமல் கட்சித் தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொழி லாளர்கள் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரித்து அவர் களுக்காக மக்களிடையே பொதுக்கூட்டம் நடத்தியது. இப்பின்னணியில் 1966ஆம் ஆண்டு தோழர் தங்கபாண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். மதுரை கோட்ஸ் மில் தொழிலாளர்கள் போராட்டம் மட்டுமல்லாமல், மீனாட்சி மில்  உள்ளிட்டு இதர நிறுவனங்களின் தொழி லாளர்களுக்கும் ஆதரவாக இயக்கங்கள் நடந்தன. அவற்றில் தங்கபாண்டி ஆர்வத் தோடு பங்கேற்றிருக்கிறார். மதுரை கோட்ஸ் மில் தொழிலாளர் சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

கருங்காலிகளை  விரட்டிய தீரம்
மதுரை கோட்ஸ் மில்லில் போனஸ் உயர்த்திக் கொடுக்கக் கோரி வேலை நிறுத்தம் நடைபெற்றது. கருங்காலிகளை வைத்து  வேலை நிறுத்தப் போராட்டத்தை உடைப்ப தற்கு நிர்வாகம் முயற்சி எடுத்தது. காவல் துறை, நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தது. ஆலை வாயிலில் தொழிலாளர்களைக் கருங்காலிகள் தாக்கினார்கள். அந்தத் தாக்கு தலைத் தங்கபாண்டியும் சக தொழி லாளர்களும் உறுதியோடு எதிர்கொண்டா ர்கள். கருங்காலிகள் விரட்டியடிக்கப்பட்டனர். இறுதியாக, நிர்வாகம் 12 விழுக்காடு போனஸ் அறிவித்தது. தொழிற்சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் நடத்திய இயக்கங்களில் கலந்துகொண்டதோடு மாதர், வாலிபர், மாணவர் ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட போராட்டங்களிலும் கலந்து கொண்டார். அக்காலத்தில் தோழர்கள் வி. கார்மேகம்,  பி.எம். குமார், வாழவந்தான் ஆகி யோர் வாயிற்கூட்டங்களிலும், சங்கப் பேரவைகளிலும் பேசியதைக் கேட்டது  தனக்கு அரசியல் புரிதலை உருவாக்கிய தாகக் கூறுகிறார் தங்கபாண்டி. தொழிலாளர்களிடையே சங்கப்பணி, கட்சிப்பணி ஆற்றியபோது தான் வசித்து வந்த  பகுதியிலும் கட்சி வேலைகளைச் செய்தார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றிருக்கிறார். அப்போது, கட்சியின் மதுரை நகர் செயலாள ராக தோழர் எம். முனியாண்டி செயல்பட்டு வந்தார். 1977ஆம் ஆண்டு நகர் குழு உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தங்கபாண்டி. 1989ஆம் ஆண்டு விலைவாசியைக் கட்டுப்படுத்த வலியுறுத்திப் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தங்கபாண்டி கைது செய்யப்பட்டு மதுரைச் சிறை யில் அடைக்கப்பட்டார். சிறையில் பி.எம். குமார், வி. கார்மேகம், என். வரதராஜன், வி.ஏ.  கருப்புசாமி (திண்டுக்கல்) உள்ளிட்ட தலை வர்களும் இருந்தனர். சிறையில் தினமும் அரசியல் வகுப்பு நடக்கும். இவ்வாறு பல  போராட்டங்களில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு 96 நாட்கள் சிறையில்இருந்தார்.

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக...
தோழர் தங்கபாண்டியின் கிராமமான நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர் பொறுப்பு தொடக்கத்தில் தலித் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை செயல்பட விடாமல் பிற சாதியினர் சீர்குலைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு தலித் பிரதிநிதி ஊராட்சி மன்றத் தலைவ ராக தேர்வு செய்யப்படுவதற்கும், சுயமாக  செயல்படுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது தானும் கிராமத்திற்கு சென்று தலித் மக்கள் உரிமை களை பாதுகாக்க தன்னால் இயன்றதைச் செய்ததைப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார் தங்கபாண்டி. தோழர் தங்கபாண்டியின் இணையர் தோழர் காமாயி தாங்கள் வசிக்கும் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கக் கிளையை உருவாக்கி அதில் நீண்ட காலம் செயல்பட்டிருக்கிறார். மாதர் சங்கம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டதோடு, கட்சி நடத்தும் போராட்டங்களிலும் காமாயி கலந்து கொண்டுள்ளார். அவ்வப்போது தங்கள் பகுதிக்கு வரும் தோழர் கே.பி. ஜானகியம்மாள் தங்கள் வீட்டுக்கு வந்ததையும் தோழர் தங்கபாண்டி பெருமையுடன் கூறுகிறார்.

கட்சிக் குடும்பம்
தோழர்கள் தங்கபாண்டி - காமாயி இணையர்க்கு இரண்டு மகள்கள், மூன்று மகன்கள். சிறுவயதிலிருந்தே தனது குழந்தை களுக்கு அரசியல் உணர்வூட்டி இயக்கங்களில் பங்கேற்க வைத்ததாக தோழர் தங்கபாண்டி கூறினார். “தீபாவளி, பொங்கல்  போன்ற பண்டிகைக் காலங்களில் என்னுடன் மகன்களும் சேர்ந்து கட்சியின் முழுநேர ஊழி யர்களுக்காக மக்களிடையே நிதி திரட்டு வோம்,” எனக் கூறினார்.  இன்று இவர்களின் இரண்டு மகன்கள் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர். மூத்த மருமகள்  மாதர் சங்க கிளைச் செயலாளர். மூன்று பேரன்கள் கட்சி உறுப்பினர்கள். அதில் மூத்த  பேரன் ஆசாத் கட்சியின் பகுதிக்குழு உறுப்பின ராகவும், பகுதி வாலிபர் சங்க தலைவராகவும் உள்ளார்.  ஆம், இவரது குடும்பம் கட்சிக் குடும்பம்.  எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பஞ்சா லையில் வேலைக்குச் சேர்ந்து, தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி தொழிலாளர் களிடையேயும், தான் வசிக்கும் பகுதிகளிலும் ஆர்வத்தோடு இயக்கப் பணி ஆற்றியவர் தோழர் தங்கபாண்டி. சக தொழிலாளர்களுக் காகவும் மக்களுக்காகவும் போராடியதற் காகப் பலமுறை சிறை சென்றிருக்கிறார்.  தனது குடும்பத்தில் கிட்டத்தட்ட அனை வரையும் கட்சியில் சேர்த்து செயல்பட வைத்திருக்கிறார். தற்போது 83 வயதாகும் தோழர் தங்கபாண்டி இன்றளவும் கட்சி உறுப்பி னராகத் தொடர்கிறார், தன்னால் இயன்ற இயக்கப்பணிகளைச் செய்து வருகிறார். சுமார் அறுபதாண்டு காலமாக இயக்க ஈடுபாட் டோடு செயல்படும் தோழர் தங்கபாண்டியின் களப்பணி போற்றத்தக்கது; பின்பற்றத்தக்கது.