பெங்களூரு,பிப் 28- பெங்களூரு அருகில் கார்ப்பரேட் ஆலைகளுக்காக 1800 ஏக்கர் விளை நிலத்தை விவசாயிகளின் அனுமதி யின்றி எதேச்சதிகாரமாக பிடுங்கி கையகப்படுத்தும் வேலையை கர்நாடக பாஜக அரசு செய்து வரு கிறது. இந்த நடவடிக்கை விவசாயி களிடம் கடும் கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது. விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக் கோரி கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் (ஏஐகேஎஸ்) உட்பட அனை த்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு அமைத்து பிப்ரவரி 20 முதல் கர்நாடகா மாநிலம் முழுவதும் விவசாயிகளின் தொடர் போராட்டம், பிரச்சாரப்பயணம் நடந்து வருகிறது. பிப்ரவரி 27 அன்று 7 ஆவது நாள் பிரச்சாரப் பய ணத்தை விஜயபுராவில் விவசாயி கள் சங்கத்தின் (ஏஐகேஎஸ்) அகில இந்திய துணைச் செயலாளர் டி.ரவீந்திரன் துவக்கி வைத்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு கிராமப்புற மாவட்டமான தேவன ஹள்ளியில் சந்திராயப்பட்டினம், ஹூப்ளி, விஜயபுரா உட்பட 13 கிராமங்களில் 341 தலித் குடும்பங் கள் உள்ளிட்ட 826 சிறு விவசாயி களின் 1780 ஏக்கர் நிலத்தை நான்கா வது முறையாக சிப்காட்டுக்கு கார்ப்ப ரேட் தொழிற்சாலைகளுக்காக விவ சாயிகளின் அனுமதி பெறாமல் எதேச்சதிகாரமாக பறிக்க கர்நாடக பாஜக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலங்களில் திராட்சை, விலை உயர்ந்த காய்கறிகள், செவி கல்ச்சர், மல்பெரி ஹார்ட்டிகல்ச்சர், ஏற்றுமதிக்கான விலை உயர்ந்த பூக்களை பசுமை குடில்கள் அமைத்து, மூன்று போகம் விளைச்சல் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் பெரிய ஏரிகளின் நீர்ப்பாசனம் மூலம் வருஷம் முழு வதும் பணப் பயிர்கள் விளையும் வளமான பகுதியாகும் இது.
அடிமாட்டு விலையில் பிடுங்கப்பட்ட நிலம்
ஏற்கனவே 20 ஆண்டு களுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் ஒரு ஏக்கர் ரூ.2 கோடி மதிப்பிலான நிலையில் ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வீதம் கொடுத்து 430 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகளுக்கு (எஸ்சி இஜட்) எடுக்கப்பட்டது. அதே போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏக்கர் ரூ.4 கோடி இருந்த நிலையில் ஏக்கருக்கு ரூ.34 லட்சம் என 2500 ஏக்கர் நிலமும் ஏக்கர் ரூ.8 கோடி இருந்தபோது ரூ. 40 லட்சம் என 850 ஏக்கர் நிலமும், மீண்டும் ஒரு ஆயிரம் ஏக்கர் நிலமும் என விவசாய நிலங்கள் பாஜக அரசால் விவ சாயிகள் அனுமதி பெறாமல் அடி மாட்டு விலைக்கு கையகப்படுத்தப் பட்டது. 20 ஆண்டுகளில் எடுக்கப் பட்ட நிலத்தில் 1000 ஏக்கருக்கு மேலான நிலம் இன்னும் தொழிற்சா லைகளுக்கு வழங்கப்படாமல் விவசாயமும் அழிக்கப்பட்டு பயன் படுத்தப்படாமல் வீணாகக்கிடக்கிறது.
எதிர்க்கும் விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல்-கைது
இந்நிலையில் நான்காம் கட்ட மாக 1780 ஏக்கர் சிறு விவசாயிகளின் வளமான நிலத்தை பறிக்க விவ சாயிகள் அனுமதி பெறாமல் சர்வாதி காரமாக அரசாணை வெளி யிட்டு அதிகாரிகள் மூலம் கையகப் படுத்தும் முயற்சியில் கர்நாடக பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக பாதிக்கப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் பாஜக அரசு விவ சாயிகள் மீது கடும் அடக்குமுறை கள், பல விவசாயிகள் மீது வழக்கு, தடியடி, கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் (ஏஐகேஎஸ்) பையா ரெட்டி கைது, காவல்துறை யின் தாக்குதலில் ஒரு விவசாயி யின் கண் இரண்டும் முழுமையாக பாதிக்கப்பட்டது உட்பட கர்நாடக பாஜக அரசுசிறு விவசாயிகள் மீது கொடூர தாக்குதல்களை தொடுத்து வருகிறது.826 சிறு விவசாய குடும்பங்கள் அதிலும் 341 தலித் குடும்பங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தலித் மக்களிடம் விவசாய நிலம் இருப்பது அபூர்வம். அதையும் கர்நாடக பாஜக அரசு பிடுங்க நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நாட்டின் உணவு தேவையை, விவசாயத்தை மீட்பதற்கான போராட்டம்
பிரச்சாரப் பயணத்தை தொடங்கி வைத்து அகில இந்திய துணைச் செயலாளர் டி.ரவீந்திரன் பேசுகை யில், நாட்டின் பொருளாதாரத்தை தொழில்களை மேம்படுத்த தொழிற்சாலைகள் துவங்குவதை விவசாயிகள் யாரும் எதிர்க்க வில்லை. உயர் தர விலைமதிப்பு மிக்க ஏற்றுமதிக்கான காய்கறிகள், பூக்கள், பழங்கள் 3 போகம் விளை யக்கூடிய ஏரிப்பாசனம் உள்ள சிறு வளமாக விவசாயிகளின் நிலங் களை அவர்களின் அனுமதியின்றி அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டு களுக்காக கர்நாடக பாஜக அரசு வன் முறையாக கையகப்படுத்துவதைத் தான் பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்க்கிறார்கள். இங்கிருந்து 20, 30 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர எல்லையை யொட்டி விவசாயத்திற்கு பயன் படாத பல ஆயிரக்கணக்கான கர்நாடக அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு வறண்ட நிலம் உள் ளது. அங்குள்ள நிலத்தை எடுத்து தொழிற்சாலைகள் அமைப்பதை விட்டு விட்டு தேவனஹள்ளி மாவட்ட த்திலுள்ள வளமான விவசாயத்தை முற்றிலும் அழிப்பதற்காகவே கடந்த 20 ஆண்டுகளாக கார்ப்பரேட்டு களுக்கு தொடர்ந்து நிலங்களை எடுத்துத்தருகிறது விவசாயிகள் விரோத கர்நாடக அரசு. இத்தகைய கர்நாடக அரசையும் கார்ப்பரேட்டு கள் நலனுக்காக செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் கொள்கை களையும்தான் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி விவசாயிகள் எதிர்க்கிறார் கள். அரசாணையில் 50 சதவீதத் திற்கு மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த நிலத்தை அரசு எடுக்காது என அறி விக்கப்பட்டுள்ளது. 72 சதவீத விவ சாயிகள் நிலத்தை கொடுக்கமாட் டோம் என மறுப்பு தெரிவித்து பல முறை மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனாலும் பாஜக அரசு ஆணையை மதிக்காமல் விவசாயத்தை அழிக் கும் செயல்களில் ஈடுபட்டு வரு கிறது. இந்தப் போராட்டம் நிலத்தை யும் விவசாயத்தையும் நாட்டின் உணவு தேவையையும் மீட்பதற் கான போராட்டமாகும் என்று தெரி வித்தார்.