tamilnadu

img

நீதி விசாரணைக்கு சிறப்பு அதிகாரி நியமனம்

கிருஷ்ணகிரி, ஆக.1- கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலை யில் கடந்த 29 ஆம் தேதி  காலை பட்டாசு குடோனில்  வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் 9 பேர் பலியானார் கள். 15-க்கும் மேற்பட்ட வர்கள் காயமடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தி யுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக குருபரப்பள்ளி சிப்காட் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலு வலர் பவணந்தியை நிய மித்து கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் கே.எம்.சரயு  உத்தரவிட்டார். நியமனம்  செய்யப்பட்ட 30 நிமிடங்க ளுக்குள் விசாரணை அலுவலர் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் விபத்து நடந்த  இடத்தின் அருகில்  வசிக்கக்கூடிய குடியிருப்பு வாசிகள் இடமும், கடைகளின் உரிமையாளர் களிடம் விபத்து குறித்து கேட்டறிந்து அதை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து முழு மையான விசாரணை நடத்தி விரிவான அறிக் கையை ஆட்சியரிடம் தாக்கல் செய்ய உள்ளனர். 6 வாரங்களில் அறிக்கை இந்த விபத்து தொடர் பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்  வந்து வழக்கை விசார ணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி  பாஸ்கரன், இது சம்பந்த மாக ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.