tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கீழ்வேளுர்-திருக்குவளைக்கு  மருத்துவர்கள் நியமனம்

“எனது கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வட்டார அரசு மருத்துவமனை மற்றும் திருக்குவளையில் உள்ள வட்டார அரசு தலைமை மருத்துவமனைகளில் போது மான மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க அமைச்சர்  முன்வருவாரா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி துணைக் கேள்வி  எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிர மணியன், “முதுநிலை மருத்துவர்களை நியமிப்பதில் ஓரிரு  மாதங்களாக சட்ட சிக்கல் இருந்து வந்தது. இந்த பிரச்ச னைக்கு தற்போது முடிவு கிடைத்துவிட்டது.எனவே, வட்டார மருத்துவமனைகளுக்கு கலந்தாய்வு மூலம் முதுநிலை மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றார்.

கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல்

தமிழக சட்டப்பேரவை சனிக்கிழமை (ஏப்.26) காலை 9.30  மணிக்கு கூடியதும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி  ரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவைத் தலைவர் மு. அப்பாவு, இரங்கல் குறிப்பை வாசித்தார். இதில்,  ‘இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுற்ற செய்தி அறிந்து, இந்த பேரவை அதிர்ச்சியடைகிறது. விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப்பெரிய உயர்வை அடை வதற்கு வித்திடும் வகையில் பணியாற்றிய கஸ்தூரி ரங்கன்  மிகச் சிறந்த அறிவியலாளராக திகழ்ந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அறிவிய லாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். அதனைத் தொடர்ந்து, கஸ்தூரி ரங்கனுக்கு மரியாதை செலுத் தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

சிகரெட் லைட்டருக்கு  தடை விதிக்கப்படும்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும்,  “தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டித் தொழில் கடுமையாக பாதித்துள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதால் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் விற்பனை மற்றும்  பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை  வைக்கப்பட்டது. முன்னதாக, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் முக்கிய தொழிலாக விளங்குகிறது. கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக, தீப்பெட்டி உற்பத்தித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒன்றிய அரசுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் கடிதம் எழுதினார். இதன் விளைவாக சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. தற்போது, வடமாநில நிறுவனங்கள் அதை தயாரிக்கும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்து சிகரெட் லைட்டர்கள் தயாரித்து ரூ.8 முதல் ரூ.10-க்கு விற்பனை செய்கின்றன. இதனால், மீண்டும் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.  இந்நிலையில், இதற்கு சட்டப் பேரவையில் சனிக்கிழமை  பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து அரசின் பரிசீல னையில் உள்ளது. முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கை தூக்காமல்,  பட்டன் அமைப்பு முறை

சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப கை தூக்கினால் கை  வலிக்கிறது. எனவே, கையை தூக்காமல், பட்டன் அமைப்பு  முறை தர வேண்டும் என்று அதிமுக ராஜன் செல்லப்பா கோரிக்கை விடுத்தார். இதற்கு விளக்கம் அளித்த பேரவைத்  தலைவர் மு.அப்பாபு, “பட்டன் அமைப்பு முறை குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்” என்றார்.

நையாண்டி செய்யக் கூடாது!

கேள்வி நேரத்தின்போது, பேசுவதற்கு வாய்ப்பு தருமாறு  கை தூக்கித் தூக்கி கை வலிக்கிறது என அரக்கோணம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சு.ரவி கூறினார். இதற்கு விளக்கம் அளித்த பேரவைத் தலைவர், “உங்களுக்கு கை சரி யான பின்னர் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன்” என்றார்.  இதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன்,  “உறுப்பினர்கள் அனைவரும் அவை மரபை காக்க வேண்டும், நையாண்டி செய்யக் கூடாது” என அறிவுறுத்தி னார்.

ஜல்லிக்கட்டில் குடிநீர் வசதி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஜல்லிக்கட்டில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படுமா என்று அதிமுக உறுப்பினர்  சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “அன்னவாசல் ஜல்லிக்கட்டில் தற்காலிகமாக டேங்கர் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும்” என்றார்.

வேதாரண்யத்தில்  விருந்தினர் மாளிகை

கஜா புயலால் வேதாரண்யத்தில் சேதமடைந்த விருந்தினர் மாளிகைக்கு பதில் புதிய கட்டிடம் கட்டித் தர அதிமுக உறுப்பி னர் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் தெரி வித்த அமைச்சர் எ.வ.வேலு, “வேதாரண்யத்தில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

7,997 காலிப் பணியிடங்கள்  நிரப்பப்படும்: கீதா ஜீவன்

தாம்பரம் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கேள்விக்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

121 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

 கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், “தனது தொகுதிக்கு உட்பட்ட ஆயுர்வேத அரசு கல்லூரி யில் 16 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? என கேள்வி  எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணி யன், சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி மற்றும் ஹோமி யோபதி ஆகிய 5 பிரிவுகளில் 121 காலிப் பணியிடங்கள் நிரப்ப நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 10  நாட்களில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்” என்றார்.

கூடா நட்பு கேடாய் முடியும்

கூட்டணி விவகாரத்தில் அதிமுக-பாஜகவுடன் நெருங்கி வந்தபோது, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  எச்சரிக்கை செய்தார். மேலும், முதலமைச்சர் சில சம்பவங் களை சுட்டிக்காட்டினார். பிறகு, பூனைக்குட்டி வெளியில் வந்த  கதையாக பாஜகவுடன் கூட்டணி என்பதை ஒருவழியாக அறி வித்தது. இந்த நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டப் பேரவையில் சனிக்கிழமை திமுக, அதிமுகவினர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதாவது, மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, தனது பேச்சை நிறைவு செய்யும் முன்பு, “கூடா  நட்பு கேடாய் முடியும் என அதிமுகவை மறைமுகமாக விமர்ச னம் செய்தார்.” அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர்  ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரும் மாறி  மாறி சில சம்பவங்களை குறிப்பிட்டனர். இதற்கு ஆளும் கட்சி  சார்பில் பதிலடி கொடுத்தனர்.