கோவை, பிப்.18- மாநில உரிமையை மீட்டெடுக்க முதல்வர் அழைத்தாலும், தங்கள் மீது வழக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாக அதிமுகவை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாடினார். “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்”, “பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்” என்ற தலைப்பில் கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துச் சாமி தலைமை வகித்தார். திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முரு கேசன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில், பாசிசம் சரிய தொடங்குவதற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். 33 மாதங்களில் 1339 கோவில்களுக்கு குடமுழுக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழ் மொழி அர்ச்சனை ஆகியவற்றை தமிழ்நாடுஅரசு கொண்டு வந்துள்ளது. ஆன்மீ கத்திற்கு எதிரானது திமுக என பரப்ப பாசிசம் முயல்கிறது. ஆனால், நண்பர்களான திப்பு சுல்தானும், தீரன் சின்னமலையும் இணைந்து ஆங்கிலே யர்களை எதிர்த்தனர். மாநில உரிமை களை மீட்டெடுக்க முதல்வர் அழைத்தா லும், அதிமுக துணிந்து வராமல், தங்கள் மீது வழக்கு வந்துவிடுமோ என்ற அச்சத் தில் உள்ளதாக அவர் சாடினார். அச்சத்தை ஏற்படுத்த அமலாக்கத் துறை, ஐடியை ஒன்றிய அரசு ஏவி பார்ப்பதாக அமைச்சர் குற்றஞ் சாட்டினார்.