உலக எழுத்தாளர்களுக்கு உத்வேகமளித்தவர்
உலக வரலாற்றையே மாற்றி எழுதிய ரஷ்யப் புரட்சிக்கு உதவிகரமாக - ஊக்கமாக இருந்த ‘தாய்’ நாவலை படைத்தவர் மக்சிம் கார்க்கி. அவர் இயல்பிலே பாட்டாளியாக இருந்ததும் அவரது வாழ்வனுபவங்களை இலக்கியமாகப் படைத்ததும் புதுமையாகவே அமைந்தது. உலகில் உள்ள முற்போக்கு - புரட்சிகர எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் சோசலிச யதார்த்தவாதம் எனும் கோட்பாட்டின் கர்த்தா. எழுத்துலகில் புதிய அலையை - புதிய பாணியை பின்பற்றிய அவரது படைப்புகள் சாகாவரம் பெற்றவை. தொழிலாளி வர்க்க அரசை உருவாக்கிய மாமேதை லெனினால் புகழப்பட்டவர். இன்றைக்கும் உலகின் இளம் எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாய் விளங்குபவர். அவரது படைப்புகளால் காலகாலமாய் மக்கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்.