tamilnadu

உலகச் செய்திகள்

சவூதி அரேபியாவில் மாற்றுக் கருத்து எழுப்பு வர்களை மொத்தமாக மரண தண்டனை கொடுத்து கொலை செய்ததைக் கண்டித்து பாகிஸ்தானில் கண்டன ஊர்வலங்கள் நடந்துள்ளன. குற்றச்சாட்டுகளை சரியாக விசாரிக்காமல், குற்றம் சாட்டப்பவர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படாமல் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொடூரச் செயலுக்கு சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர்.

எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்து கிறோம் என்ற உறுதிமொழியை சவூதி அரேபியாவிடமும், ஐக்கிய அரபு அமீரகத்திடமும் பெற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சித்து வருகிறார். உக்ரைன் நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள் ளது. அதிலிருந்து தப்பிக்க உற்பத்தியை அதிகப்படு த்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் விரும்பு கின்றன. ஆனால், தற்போது வரையில் அந்த உறுதி மொழியை போரிஸ் ஜான்சனால் பெறமுடியவில்லை.

சீனாவின் தென்மேற்குப்  பகுதியில் திபெத் தன்னாட்சிப்பகுதி அமைந்துள்ளது. 2021 ஆம்  ஆண்டில் மட்டும் இந்தப் பகுதியில் 1 லட்சத்து  20 ஆயிரம் கி.மீ. தொலைவிலான சாலைகள் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. ஐந்து நகர்ப்பகுதிகள் மற்றும் 67 கிராமங்களில் இவை அமைக்கப்பட்டன. 320 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான திட்டங்களை செயல் படுத்தியிருக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற பணிகள் தொடரவிருக்கின்றன.