கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் ஆகியோரின் மகள் சந்தியா அகர கோட்டாலத்தைச் சேர்ந்த முருகேசன் - தனம் ஆகியோரின் மகன் பாலாஜி (கிராம நிர்வாக அலுவலர்) திருமணம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூரில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வெள்ளியன்று (செப்,6) நடைபெற்றது. கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மக்களவை உறுப்பினர் மலையரசன்,மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணி, மாவட்ட திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப்பேசினார். திமுக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் காமராஜ், கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சுப்ராயலு, ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், வெங்கடாசலம், வைத்தியநாதன், அன்புமணிமாறன், வசந்தவேல், கிருஷ்ணன், சின்னத்தம்பி,பேரூர் கழக செயலாளர் துரை தாகப்பிள்ளை,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்,ஏ கேடி கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன்,ஜேஎஸ் குளோபல் பள்ளி தாளாளர் செந்தில் குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர், தேவேந்திரன், கள்ளக்குறிச்சி அதிமுக நகரச் செயலாளர் பாபு, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் ஞானவேல், கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோசப்ஆனந்தராஜ், சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அரவிந்தன் நன்றி கூறினார்.