விசாரணைக்கு ஆஜராவாரா ஓபிஎஸ்? சென்னை, மார்ச் 20 - முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணை யம் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதாவோடு தொடர் புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் பல கட்ட விசாரணை நடந்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 21ஆம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி யுள்ளது. இதன்படி காலை 11.30 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் முதல் முறையாக விசாரணைக்கு ஆஜரவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் பன்னீர்செல்வம் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.