விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை - கருத்தரங்கம்
திருவாரூர், ஜுன் 1- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவை-கருத்தரங்கம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் ஆறு.பிரகாஷ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி. கந்தசாமி எதிர்கால கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். பேரவையில் பங்கேற்ற அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ. லாசர், `விவசாயத் தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். இதில், மாநிலப் பொருளாளர் அ. பழனிச்சாமி, மாவட்டப் பொருளாளர் சரவண. சதீஷ்குமார் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சிகளுக்கும் நூறு நாள் வேலையை உடனே துவங்கிட வேண்டும். நூறு நாள் வேலைக்கான சம்பள பாக்கியை முழுமையாக வழங்கிட வேண்டும். குடிமனை பட்டா உட்பட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவாதிக்கப்பட்டது.