மதுரை, ஜன.1- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறு சுறுப்பாகச் செயல்படுகிறார் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பாராட்டியுள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சனிக் கிழமை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரி சனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் கே. ராஜூ கூறியதாவது: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அதிமுக அரசு செயல்பட்டது போல திமுக அரசும் செயல்பட வேண்டும். ஸ்டாலின் முதலமைச்சராக சுறுசுறுப்பாகப் பணி யாற்றுகிறார், அவரோடு சேர்ந்த அனை வரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.5ஆயிரம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்தும் என நம்புவதாகக் கூறினார். ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமி ழகத்தில் மற்றொரு ஊரடங்கு வருமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்றார். மதுரை மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும், அந்த நிதியை முதல்வர் நிச்சயம் அளிப்பார் என்ற நம் பிக்கை உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும் அதிமுக மக்களின் நலனுக்காக போராடும் என்றார்.