சென்னை,ஜன.7- 2022- ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் ஜனவரி 5 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஜன.6 அன்று ஆளுநர் உரை மீது உறுப்பினர்கள் விவாதம் நடந்தது. பிறகு, ஜனவரி 7 ஆம் தேதி அந்த விவாதத்துக்கு பதில் அளித்தும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித் தும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் விரிவாக பேசினார். இதனையடுத்து, மொத் தம் 15 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சட்டப் ்பேரவைக்கு கூட்டம் முடிவடைந்தது. மறுதேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் மு.அப்பாவு சட்ட சபையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.