tamilnadu

img

ஜெர்மனி டென்னிஸ் வீரர் ஸ்வெரேவுக்கு கூடுதல் தண்டனை?

அதிரடி டென்னிஸ் வீரர்களில் ஒரு வரும் ஜெர்மனியைச் சேர்ந்த வருமான ஸ்வெரேவ் கடந்த மாதம் மெக்சிகோவில் நடைபெற்ற அகபுல்கோ ஓபன் டென்னிஸ் போட்டி யின் இரட்டையர் பிரிவில் பிரேசிலின் மார்செலோ மெலோவுடன் இணைந்து களமிறங்கி முதல் சுற்றி லேயே கிளாஸ்பூல் (இங்கி லாந்து)- ஹெலியாவாரா (பின்லாந்து) ஜோடியிடம் தோல்வியை தழுவினார்.  தோல்விகண்ட கடுப்பில் நடுவரை அச்சுறுத்தும் வித மாக அவர் அமர்ந்திருந்த இருக்கை மீது  4 முறை டென்னிஸ் ராக்கெட்டால் (பேட்) ஆவேசமாக அடித் தார்.  இந்த விவகாரத்தால் ஸ்வெரேவ்  ஒற்றையர் பிரி வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, துரித விசார ணை மேற்கொண்ட ஆட வர் டென்னிஸ் சம்மேள னம்  8 வார கால தடையும், ரூ.19 லட்சம் அபராதமும் விதித்தது.  இதோடு ஸ்வெரேவுக்கு தண்டனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், ஓராண்டு காலம் அவ ரது நடத்தை தீவிரமாக கண்காணிக்கப்படும். அந்த காலக்கட்டத்தில் ஏதாவது தவறு செய்தால் கடும் தண்ட னைக்குள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 24 வயதாகும் ஸ்வெரேவ் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வர் என்பது குறிப்பிடத் தக்கது.